தமிழ்நாடு

ஸ்டெர்லைட் வழக்கு.. சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீடு செய்ய முடிவு

Published

on

தூத்துக்குடி: ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் தேசிய பசுமை தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்யும் என்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.

மக்களின் எதிர்ப்பு காரணமாக தூத்துக்குடியில் மூடப்பட்டுள்ள ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் அனுமதி அளித்துள்ளது. இதனால் எப்போது வேண்டுமானாலும் இந்த ஆலை திறக்கப்பட்டு மீண்டும் இயக்கப்பட வாய்ப்புள்ளது.

இந்த நிலையில் இன்று காலை ஸ்டெர்லைட் வழக்கு தொடர்பாக தற்போது வேதாந்தா நிறுவனம் உச்ச நீதிமன்றம் சென்றுள்ளது. உச்ச நீதிமன்றத்தில் அந்த நிறுவனம் கேவியட் மனுதாக்கல் செய்துள்ளது.

இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். ஸ்டெர்லைட் வழக்கு தொடர்பாக தமிழக அரசு அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன எடுக்க போகிறது என்று அவர் விளக்கம் அளித்தார்.

author avatar
seithichurul

Trending

Exit mobile version