இந்தியா
மாநிலங்களில் ஊரடங்கு: தலைமை செயலாளர்களுக்கு மத்திய அரசு கடிதம்!
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் மிக வேகமாக கொரோனா வைரஸ் பரவி வருகிறது. குறிப்பாக தமிழகம், கர்நாடகம், கேரளா, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், டெல்லி ஆகிய மாநிலங்களில் கடந்த சில நாட்களாக ஜெட் வேகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஏறி வருகிறது.
இந்த நிலையில் மீண்டும் ஒரு சில மாநிலங்களில் அல்லது ஒரு சில முக்கிய பகுதிகளில் மட்டும் முழு ஊரடங்கு அமல்படுத்த வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது. இப்பொழுதே ஒரு சிலர் தங்கள் சொந்த ஊரை நோக்கி செல்லத் தொடங்கி விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக உள்ளூரில் ஊரடங்கு அமல்படுத்துவது குறித்து மாநில அரசுகளே முடிவெடுக்கலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
உள்ளூர் ஊரடங்குக குறித்து மாநிலங்கள் முடிவு எடுக்கலாம் என்பது குறித்து கடிதம் ஒன்றை அனைத்து மாநில தலைமைசெயலாளர்களுக்கும் மத்திய சுகாதாரத் துறை கூடுதல் செயலாளர் கடிதம் அனுப்பியுள்ளார். இதனை அடுத்து அந்தந்த மாநிலங்களில் எந்த பகுதிகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாக இருக்கிறது என்பதை கண்டறிந்து அந்த பகுதிகளில் மாநில அரசே ஊரடங்கை அமல்படுத்தலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.