சினிமா
ஜெய்பீம் என்னை துங்க விடாமல் செய்துவிட்டது… முதல்வர் டிவிட்…
சூர்யா நடிப்பில் து.பா.சரவணன் என்பவர் இயக்கத்தில் உருவாக்கிய திரைப்படம் ‘ஜெய்பீம்’. இந்த படம் வரும் தீபாவளி விருந்தாக நவம்பர் 2ஆம் தேதி அமேசான் ஓடிடியில் வெளியாக உள்ளது. சூர்யா மற்றும் ஜோதிகாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.
சூர்யா இந்த படத்தில் வழக்கறிஞராக நடித்துள்ளார். ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை எதிர்த்து வழக்குப் பதிவு செய்யும் அவர் அந்த மக்களுக்காக வாதாடி அவர்களுக்கு தேவையான உரிமைகளை பெற்றுத் தருவதுதான் தான் இந்த படத்தின் கதை. இந்த படத்தில் சூர்யா, ரஜிஷா விஜயன், பிரகாஷ்ராஜ், மணிகண்டன் உள்பட பலர் நடித்துள்ளனர்.
இந்நிலையில், இப்படத்தை பார்த்த முதல்வர் ஸ்டாலின் படக்குழுவினரை வெகுவாக பாராட்டியுள்ளார். படத்தை 2 பக்கங்களில் பாராட்டு கட்டுரை எழுதியுள்ளார். தனது டிவிட்டர் பக்கத்தில் ‘பார்வையளர்களின் மனதில் தாக்கத்தையும் அதன்விளைவாக சமூகத்தில் நல்லதொரு மாற்றத்தையும் ஏற்படுத்துவதுதான் சிறந்ததொரு கலைப்படைப்பு! நேற்று நண்பர் சூர்யா வழக்கறிஞர் சந்துருவாக வாழ்ந்துள்ள ஜெய்பீம் திரைப்படத்தைப் பார்த்தேன். அத்திரைப்படம் ஏற்படுத்திய அதிர்வுகள் ஏராளம்’ என பதிவிட்டுள்ளார்.
இதற்கு நன்றி தெரிவித்துள்ள சூர்யா ‘வார்த்தைகளின்றி நெகிழ்ந்து நிற்கிறேன். மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் உணர்வுப்பூர்வமான பாராட்டு, ஜெய்பீம் திரைப்படத்தின் நோக்கத்தை நிறைவேற்றி இருக்கிறது. ஜெய்பீம் படக்குழுவினர் அனைவரின் சார்பாகவும் நமது தமிழக முதல்வருக்கு நெஞ்சம் நிறைந்த நன்றிகள்’ என டிவிட் செய்துள்ளார்.