தமிழ்நாடு

மனைவி, மகனுடன் வரிசையில் நின்று வாக்களித்த முக ஸ்டாலின்!

Published

on

தமிழகத்தில் இன்று தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் இன்று காலை 7 மணி முதலே வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சென்னையில் அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் காலை 7 மணிக்கே தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் திமுக தலைவர் முக ஸ்டாலின் தனது மனைவி துர்கா மற்றும் மகன் உதயநிதி ஸ்டாலினுடன் சென்னை எஸ்.ஐ.இ.டி. கல்லூரியில் தனது வாக்கை செலுத்தினார். மனைவி மற்றும் மகனுடன் வரிசையில் நின்ற முக ஸ்டாலின் தன்னுடைய முறை வரும்போது வாக்குச்சாவடிக்கு உள்ளே சென்று வாக்களித்தார்என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக வாக்களிக்கும் முன்னர் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதியின் சமாதிக்கு மனைவி, மகனுடன் சென்று அவர் அஞ்சலி செலுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. மு க ஸ்டாலின் வாக்களிக்கும் போது எடுத்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் வாக்களித்த பின் திமுக தலைவர் முக ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசியபோது ’எனக்கு வந்து கொண்டிருக்கும் தகவலின்படி அதிக அளவில் வாக்குப்பதிவு அனைத்து தொகுதியிலும் நடைபெற்று வருகிறது. இளைஞர்கள் ஆர்வத்துடன் வாக்க்ளிக்கின்றனர். இது ஆளுங்கட்சிக்கு எதிரான தேர்தல் என்றும், மே-2 ஆம் தேதி மக்கள் தீர்ப்பு சிறப்பாக இருக்கும் என்றும் கூறினார்.

Trending

Exit mobile version