தமிழ்நாடு
மெரினாவில் கருணாநிதியின் நினைவிடம் வந்த ஸ்டாலின்.. அப்பாவிற்கு அஞ்சலி!
சென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் நல்லுடல் அடக்கம் செய்யப்பட்டு இருக்கும் மெரினா நினைவிடத்தில் ஸ்டாலின் இன்று காலை அஞ்சலி செலுத்தினார்.
மோசமான உடல் குறைபாடு காரணமாகவும், வயோதிகம் காரணமாகவும் திமுக தலைவர் கருணாநிதி செவ்வாய் கிழமை மாலை மரணம் அடைந்தார். தமிழகம் முழுக்க இது மக்களை துக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.
அவரது உடல் மெரினாவில் அண்ணா சமாதிக்கு அருகில் அடக்கம் செய்யப்பட்டது. கருணாநிதி அடக்கம் செய்யப்பட்டுள்ள நினைவிடத்தில் திமுக செயல்தலைவர் ஸ்டாலின் இன்று அஞ்சலி செலுத்தினார.
காலையிலேயே நினைவிடம் சென்ற ஸ்டாலின் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். திமுக உறுப்பினர்களுடன் பலர் அவருடன் அஞ்சலி செலுத்தினார்.