தமிழ்நாடு

இரவோடு இரவாக சுத்தம் செய்யப்பட்ட ஸ்டாலின் வசிக்கும் சாலை!

Published

on

தமிழகத்தில் அதிமுக ஆட்சி முடிவடைந்து திமுக ஆட்சி அமைய இருக்கும் நிலையில் தமிழகத்தின் முதல்வராக பொறுப்பு ஏற்க இருக்கும் முக ஸ்டாலின் அவர்களுக்கு கடந்த இரண்டு நாட்களாகவே முதல்வருக்கு உரிய மரியாதை தரப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி நேற்று இரவோடு இரவாக முக ஸ்டாலின் வசித்து வரும் ஆழ்வார்பேட்டை பகுதியில் உள்ள அவரது இல்லம் இருக்கும் சாலை சுத்தம் செய்யப்பட்டது. மேலும் அங்கிருந்த பழைய பொருள்கள் எல்லாம் அகற்றப்பட்டதாகவும் குப்பைகள் அகற்றப்பட்டப்பட்டதாகவும் இந்த பணியில் மாநகராட்சி ஊழியர்கள் மேற்கொண்டதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

முதலமைச்சராக ஸ்டாலின் அவர்கள் பொறுப்பேற்க உள்ள நிலையில் சென்னை ஆழ்வார்பேட்டை பகுதியில் அமைந்துள்ள ஸ்டாலின் வசிக்கும் தெருவில் மாநகராட்சி அதிகாரிகள் இரவு முழுவதும் தூய்மை பணியில் ஈடுபட்டனர். மேலும் ஸ்டாலின் இல்லத்திலிருந்து வாகனங்கள் வெளியே செல்லவும் வாகனங்கள் உள்ளே செல்லவும் வசதியாக இருக்கும் வகையில் சாலையில் உள்ள தடுப்பு சுவர்களும் இரவோடு இரவாக அகற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பணியில் 30க்கும் மேற்பட்ட மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர் என்றும் தற்போது ஸ்டாலின் வசித்து வரும் சாலை புதிய சாலை போல் காட்சி அளித்தது என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளன. தமிழக முதல்வராக பொறுப்பேற்க இருக்கும் முக ஸ்டாலின் வசித்து வரும் சாலை கடந்த 10 ஆண்டுகளாக கண்டுகொள்ளாமல் இருந்த நிலையில் இன்று உடனடியாக கவனிக்க பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version