தமிழ்நாடு
பதவியேற்பு எளிமையாக நடக்கும், வாக்களிக்காதவர்களுக்கும் நன்றி: முக ஸ்டாலின்
நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்றுள்ளது என்பதும் அந்த கட்சி தனித்து ஆட்சி அமைக்கும் அளவுக்கு அதிக தொகுதிகளை கைப்பற்றி உள்ளது என்பதையும் பார்த்தோம்.
இந்த நிலையில் இன்னும் ஓரிரு நாளில் தமிழக முதல்வராக பதவி ஏற்க இருக்கும் திமுக தலைவர் ஸ்டாலின் செய்தியாளர்களை நேற்று இரவு சந்தித்தார். அப்போது அவர் கூறியபோது மகத்தான வெற்றிக்கு வழி வகுத்துக் கொடுத்த அனைவருக்கும் நன்றி. பத்தாண்டு காலமாக தமிழகம் பாதாளத்திற்கு போயுள்ளது. அதனை சரிசெய்வதற்காக திமுகவுக்கு மிகப்பெரிய வெற்றியை மக்கள் அளித்துள்ளனர்.
எங்களுக்கு வாக்களித்தவர்களுக்கும் வாக்காளிக்காதவர்களுக்கும் நன்றி. அனைத்து வாக்குறுதிகளும் படிப்படியாக நிறைவேற்றப்படும். கொரோனா நிலைமையை மனதில் வைத்துக்கொண்டு பதவி பிரமாணம் நிகழ்ச்சி ஆளுநர் மாளிகையில் மிக எளிமையாக நடத்தப்படும்.
வாழ்த்து தெரிவித்த அனைத்து தேசிய தலைவருக்கும் நன்றி, எங்கள் ஆட்சிக்கு அவர்களும் ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு மு க ஸ்டாலின் கூறியுள்ளார்.