செய்திகள்

வண்டலூரில் இருந்து கிளாம்பக்கம் வரை மெட்ரோ ரயில் சேவை – ஸ்டாலின் அறிவிப்பு

Published

on

சென்னையில் பல வருடங்களுக்கு முன்பே திமுக ஆட்சியில் மெட்ரோ ரயில் திட்டம் துவங்கப்பட்டது. ஆனால், திமுக ஆட்சி முடிவுக்கு வர அதிமுக ஆட்சியில் மெட்ரோ ரயில் சேவை பணி முடிந்து அமுலுக்கு வந்தது. இதன் மூலம் பயணிகள் குறுகிய நேரத்தில் பயணிக்க முடிகிறது.

இந்நிலையில், இன்று சட்டசபையில் கேள்வி நேரம் துவங்கியது. இதில், பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் இ. கருணாநிதி சென்னை மெட்ரோ ரயில் சேவையை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து வண்டலூர் வரை நீடிக்கப்படுமா என கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் கூறைய ஸ்டாலின், வண்டலூர் அருகே கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்படவுள்ளது. மீனம்பாக்கத்தில் இருந்து கிளாம்பக்கம் வரை மெட்ரோ ரயில் சேவையை நீடிக்க அரசு திட்டமிட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

author avatar
seithichurul

Trending

Exit mobile version