தமிழ்நாடு

ஸ்டாலின் தலைமையில் வேட்பாளர்கள் கூட்டம்: காணொலி மூலம் நடந்தது!

Published

on

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற்ற நிலையில் அன்றைய தினம் பதிவான வாக்குகள் நாளை மறுநாள் எண்ணப்பட உள்ளன. தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்கான அனைத்து பணிகளையும் தேர்தல் ஆணையம் செய்து உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் நேற்று வெளியான தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பில் கிட்டத்தட்ட அனைத்து கருத்துக் கணிப்பிலும் திமுக தான் வெற்றி பெறும் என்றும் திமுகதான் அடுத்து ஆட்சியமைக்கும் என்றும் கூறியது. மேலும் 160 முதல் 190 இடங்கள் வரை திமுக கூட்டணிக்கு கிடைக்கும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது

இந்த நிலையில் திமுக ஆட்சியை பிடிக்கும் என்று கிட்டத்தட்ட உறுதி செய்துள்ள நிலையில் வெற்றி கொண்டாட்டம் வேண்டாம் என்றும் வீட்டிலேயே இருந்து பாதுகாப்புடன் தேர்தல் முடிவைப் பாருங்கள் என்றும் திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை விட்டிருந்தார்

இந்த நிலையில் தற்போது திமுக தலைவர் முக ஸ்டாலின் தலைமையில் திமுக வேட்பாளர்கள் கூட்டம் காணொலி காட்சி வாயிலாக தொடங்கியது. இதில் அனைத்து மாவட்ட செயலாளர்களும் கலந்து கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் முக்கிய விஷயங்கள் ஆலோசனை செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

seithichurul

Trending

Exit mobile version