செய்திகள்
தமிழகத்தில் ஊரடங்கு ரத்தா?..பள்ளிகள் திறக்கப்படுமா?… முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை
தமிழகத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவியதன் காரணமாக இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கு, பள்ளிகள் திறக்க தடை என பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்தது. அதன் காரணமாக கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகிறது. ஜனவரி 31ம் தேதியுடன் ஊரடங்கு கட்டுப்பாடுகள் முடிவடையவுள்ளது.
இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமை செயலகத்தில் மருத்துவத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை நீட்டிப்பதா அல்லது தளர்வு அளிப்பதா, இரவுநேர ஊடங்கு, ஞாயிறு முழு ஊரடங்கை நீட்டிப்பதா அல்லது ரத்து செய்வதா என இந்த ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு வருகிறது.
மேலும், 10,11,12ம் வகுப்பு மாணவர்களுக்கு மீண்டும் நேரடி வகுப்பு நடத்துவது பற்றியும் இந்த கூட்டத்தில் முதல்வர் ஆலோசனை செய்து வருகிறார். விரைவில் இது தொடர்பான அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.