செய்திகள்
குறைந்த கொரோனா.. கூடுதல் தளர்வுகள் அறிவித்த முதல்வர் ஸ்டாலின்…
![stalin - Bhoomitoday stalin](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2022/01/stalin-1.jpg)
தமிழகத்தில் சில நாட்களுக்கு முன்பு தினசரி கொரோனா பாதிப்பு 25 ஆயிரத்தை தாண்டியது. எனவே, இரவு ஊரடங்கு, ஞாயிறு முழு ஊரடங்கு என பல்வேறு கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டது. இதன் தொடர்ச்சியாக கொரோனா படிப்படியாக குறைந்தது. தற்போது தினசரி கொரோனா பாதிப்பு 3 ஆயிரத்திற்கு கீழே சென்றுள்ளது.
இந்நிலையில், தமிழக அரசு ஏற்கனவே அறிவித்த கொரோனா கட்டுப்பாட்டுகளை தளர்த்தியுள்ளது. அதன்படி, நர்சரி, மழலையர் விளையாட்டு பள்ளிகளை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மேலும், கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி பொருட்காட்சி நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதோடு, திருமண விழாவில் அதிகபட்சமாக 100 பேர் என்பதை அதிகரித்து 200 பேர் வரை பங்கேற்கலாம் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதேபோல், இறப்பு சார்ந்த நிகழ்வில் 100 பேருக்கு மிகாமல் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.