செய்திகள்
அம்மா உணவகங்களில் இலவசம் – முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. எனவே, சென்னை, கடலூர், தூத்துக்குடி, கன்னியாகுமாரி, போன்ற கடலோர மாவட்டங்களில் கனமழை பெயது வருகிறது. இது போக பல மாவட்டங்களிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
எனவே, கடந்த 2 நாட்களாகவே தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வங்கக் கடலில் புதிதாக ஒரு புயல் உருவாகி இருப்பதால் நவம்பர் 11ம் தேதி வரை மழை நீடிக்கும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மேற்கு வங்க கடலில் தோன்றியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி புயலாக மாறும் வாய்ப்பு இருப்பதால் சென்னை உள்பட தமிழகத்தின் கடலோரப் பகுதி மாவட்டங்களிலும் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது
ஒருபக்கம் சென்னையில் பல பகுதிகளில் சாலைகள் மற்றும் வீடுகளில் மழை நீர் புகுந்து விட்டது. எனவே, தண்ணீரை வடிகட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் புலம்பும் வீடியோக்கள் வெளியானது. மொத்தத்தில் சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மழைக்காலம் முடியும் வரை அம்மா உணவகங்களில் உணவு இலவசம் என தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.