செய்திகள்
வீடு இடிந்து விழுந்த 9 பேர் பலி – ரூ.5 லட்சம் நிதியுதவி அறிவித்த முதல்வர்
தமிழகத்தில் கடந்த 10 நாட்களுக்கும் மேல் மழை பெய்து வருகிறது. வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலும் இன்று அதிகாலை சென்னைக்கு அருகே கரையை கடந்தது. எனவே, தமிழகத்தில் பல மாவட்டங்களில் மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதோடு, வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டில் உள்ள மசூதி தெருவில் நேற்று இரவு பெய்த கனகமழை காரணமாக இன்று அதிகாலை ஒரு வீட்டின் சுவர் இடிந்து விழந்தது. இதில், இடிபாடுகளுகளில் சிக்கி 4 குழந்தைகள், பெண்கள் என மொத்தம் 9 பேர் உயிரிழந்துவிட்டனர். 5 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், இந்த குடும்பத்திற்கு 5 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் நிவாரணமும் வழங்கப்படும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.