தமிழ்நாடு

மருந்துக்கு வரி விலக்கு: முதல்வர் ஸ்டாலின், அண்ணாமலை கடிதம்!

Published

on

நாமக்கல் பகுதியைச் சேர்ந்த குழந்தை ஒன்றின் சிகிச்சைக்கு தேவைப்படும் மருந்துக்கு வரி விலக்கு அளிக்குமாறு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோர் கடிதம் எழுதியுள்ளனர்
நாமக்கல் பகுதியைச் சேர்ந்த மித்ரா என்ற குழந்தை முதுகெலும்பு தசை செயலிழப்பால் பாதிக்கப்பட்டு உள்ளது. இந்த குழந்தைக்கு தேவையான மருந்துகள் அனைத்திற்கும் வரி விலக்கு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வருகிறது. இதனை அடுத்து தமிழக முதல்வர் முக ஸ்டாலின் மத்திய நிதியமைச்சருக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:

முதுகெலும்பு தசை செயலிழப்பால் பாதிக்கப்பட்டோருக்கு, மரபணு சிகிச்சை பரிந்துரைக்கப்படுகிறது. இந்த சிகிச்சைக்கான மருந்தின் விலை, 16 கோடி ரூபாயாக உள்ளது. தமிழகத்தில் ஆண்டுக்கு, 90 முதல், 100 பேர் வரை, இந்நோய் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். மருந்தின் விலை அதிகமாக இருப்பதால், பலர் சிகிச்சை மேற்கொள்ள சிரமப்படுகின்றனர்.

இந்த மருந்தை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யும்போது, சுங்க வரி மற்றும் ஜி.எஸ்.டி., வரி விதிக்கப்படுகிறது. சமீபத்தில், ஒரு குழந்தைக்காக மருந்தை இறக்குமதி செய்தபோது, மத்திய அரசு வரி விலக்கு அளித்தது. எனவே, உயிர் காக்கும் மருந்துகளை இறக்குமதி செய்வதற்கு, சுங்க வரி மற்றும் ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி., வரி மற்றும் இதர வரிகளில் இருந்து விலக்கு அளிக்க, நிதித்துறை அமைச்சகத்துக்கு அறிவுறுத்த வேண்டும்

பாஜக தலைவர் அண்ணாமலை எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: தமிழகத்தை சேர்ந்த, 2 வயது குழந்தை மித்ரா, முதுகெலும்பு தசை செயலிழப்பு நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு சிகிச்சை அளிக்கும் மருந்தை இறக்குமதி செய்ய, 16 கோடி ரூபாய் செலவாகும். அதற்கு, இறக்குமதி வரி, ஜி.எஸ்.டி., வரியாக, 6 கோடி ரூபாய் வருகிறது. குழந்தையின் தந்தை நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர். எனவே, மனிதநேய அடிப்படையில், குழந்தையின் உயிரை காக்கும் மருந்திற்கு, வரி விலக்கு அளிக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த கடிதங்களை அடுத்து இந்த குழந்தைக்கு தேவையான மருந்துகளுக்கு மத்திய நிதியமைச்சர் வரிவிலக்கு அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version