செய்திகள்
பொங்கல் பரிசு தொடர்பான சர்ச்சை… ஸ்டாலின் எடுத்த அதிரடி நடவடிக்கை…
தமிழக அரசு சார்பில் பொங்கலை முன்னிட்டு ரேஷன் அட்டை வைத்திருக்கும் எல்லோருக்கும் பொங்கல் பரிசு இலவசமாக கொடுக்கப்பட்டது. இதில், அரிசி, வெல்லம், முந்திரி பருப்பு, புளி,கரும்பு, ரவை என மொத்தம் 22 பொருட்கள் இடம் பெற்றிருந்தது.
ஆனால், சில ஊர்களில் மற்றும் சில ரேஷன் கடைகளில் கொடுக்கப்பட்ட அரிசி நன்றாக இல்லை என்றும், வெல்லம் உருகிபோய்விட்டது எனவும், புளியில் புழு இருந்ததாகவும் மக்கள் புகார் கூறினார். இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களிலும் வெளியானது. எனவே, அதிமுக மற்றும் பாஜக கட்சிகள் இதை கடுமையாக விமர்சித்தது.
எனவே, இதுபற்றி முதல்வர் ஸ்டாலின் இன்று காலை ஆலோசனை நடத்தினார். முடிவில் புகாருக்கு காரணமானோர் மீது நடவடிக்கை எடுப்பது என முடிவெடுக்கப்பட்டது.
தரமற்ற பொருட்களை வழங்கிய நிறுவனங்கலை கருப்பு பட்டியலில் சேர்க்க முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். மேலும், அரசின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சிப்பதை எக்காரனம் கொண்டும் அனுமதிக்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.