இந்தியா
வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது SSLV-D2 ராக்கெட்!
பூமியின் கண்காணிப்பு செயற்கைக்கோளான SSLV-D2 ராக்கெட் மூலம் 3 செயற்கைக் கோள்களை இஸ்ரோ இன்று ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் 7-ஆம் தேதி 500 கிலோ வரையிலான எடை குறைந்த 2 செயற்கைகோள்களை சுமந்து செல்லும் வகையில், சிறிய ரக ராக்கெட்டுகளை இஸ்ரோ புதிதாக வடிவமைத்து விண்ணில் செலுத்தியது. ஆனால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இஸ்ரோவின் இந்த புதிய திட்டமானது, ராக்கெட்டின் சென்சார் செயலிழப்பு காரணகான சரியான சுற்றுப்பாதையில் நிலைநிறுத்த முடியாமல் போனது.
இதனையடுத்து அந்த திட்டம் மேம்படுத்தப்பட்டு மீண்டும் செயல்படுத்தப்படும் என்று இஸ்ரோ அப்போது கூறியது. அதன்படி இன்று மீண்டும் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து இன்று காலை 9.18 மணிக்கு ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது.
இஓஎஸ்-07 புவி கண்காணிப்பு செயற்கைக்கோள், ஆசாதி சாட்-2 மற்றும் ஜானஸ்-1 உள்பட 334 கிலோ எடை கொண்ட 3 செயற்கைக்கோள்களை இது சுமந்து சென்றது. பூமியில் இருந்து 356.2 கிலோ மீட்டர் உயரத்தில் 450 கிலோ மீட்டர் புவிவட்ட சுற்றுப்பாதையில் இது நிலைநிறுத்தப்படுள்ளது.