சினிமா செய்திகள்
அஜித், விஜய்யை இணைத்து ரூ.500 கோடி பட்ஜெட்டில் ஒரு படம்: எஸ்.எஸ்.ராஜமவுலி திட்டம்?
அஜித் விஜய்யை இணைத்து ரூபாய் 500 கோடி பட்ஜெட்டில் ஒரு திரைப்படம் எடுக்க இயக்குனர் எஸ் எஸ் ராஜமவுலி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தெலுங்கு திரையுலகின் இரண்டு பிரபலங்களான ராம்சரண் தேஜா மற்றும் ஜூனியர் என்டிஆர் ஆகிய இருவரையும் இணைத்து ’ஆர்.ஆர்.ஆர்’ என்ற படத்தை உருவாக்கி ஆயிரம் கோடி ரூபாய் வசூல் செய்த சாதனைக்கு சொந்தக்காரர் எஸ்எஸ் ராஜமவுலி.
அதேபோல் தமிழில் அஜீத் விஜய்யை இணைக்கும் இயக்குனர் உண்டென்றால் அது ராஜமவுலி அல்லது மணிரத்னம் ஆகிய இருவருக்கு மட்டுமே திறமை உள்ளது என்று கூறப்படுவது உண்டு.
அந்த வகையில் இயக்குனர் எஸ்எஸ் ராஜமவுலி அஜித் விஜய்யை இணைத்து ஒரு உண்மையான பான் – இந்தியா திரைப்படத்தை இயக்க திட்டமிட்டிருப்பதாகவும் மகேஷ்பாபு படத்தை அடுத்து அவர் அந்த படத்தை தான் தொடங்குவார் என்றும் இந்த படம் கண்டிப்பாக உலக அளவில் மிகப்பெரிய வசூல் சாதனை செய்யும் என்றும் கூறப்படுகிறது.
இப்படி ஒரு திரைப்படம் உருவானால் தமிழ் திரை உலகின் பிரமாண்டமான திரைப்படமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
x