சினிமா செய்திகள்
எஸ்.எஸ்.ராஜமெளலியின் அடுத்த படம் விண்வெளி கதை: ஹீரோ யார் தெரியுமா?
பிரமாண்ட இயக்குனர் எஸ் எஸ் ராஜமவுலி இயக்கத்தில் ராம்சரண் தேஜா மற்றும் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் உருவான ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் ஜனவரி 7ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்பதும் பாகுபலி மற்றும் பாகுபலி 2 ஆகிய படங்களின் வெற்றிக்கு பின்னர் வெளியாகும் படம் என்பதால் இந்த படம் உலகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தின் புரமோஷனுக்காக நேற்று சென்னை வந்திருந்த ராஜமவுலி செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது தனது அடுத்த படம் குறித்து அவர் கூறுகையில் என்னுடைய அடுத்த படம் மகேஷ் பாபுவுடன் இணைந்து பணிபுரியும் படம் என்றும் இந்த படம் ஆர்.ஆர்.ஆர் படத்தின் ரிலீஸுக்கு பின்னர் மக்களின் விமர்சனங்களை அடுத்து தொடங்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும் இந்த படம் விண்வெளி சம்பந்தப்பட்ட கதையம்சம் கொண்டது என்றும் கூறப்படுகிறது. இதுவரை வரலாற்று படங்களை எடுத்து வந்த எஸ்எஸ் ராஜமவுலி முதல் முறையாக விண்வெளி சம்பந்தப்பட்ட படம் ஒன்றை எடுக்க உள்ளார் என்பதும் இந்த படமும் ஹாலிவுட் படத்திற்கு இணையான காட்சி அமைப்புகள் கொண்டதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த படத்தை அவரது தந்தை கே.வி விஜயேந்திர பிரசாத் வழக்கம் போல் திரைக்கதை எழுதுவார் என்பது குறிப்பிடத்தக்கது. எஸ்.எஸ். ராஜமௌலி மற்றும் மகேஷ் பாபு ஆகியோர் இணையும் இந்தப் படம் இந்திய திரையுலகில் மேலும் ஒரு மைல் கல்லாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
My Next Film With @urstrulyMahesh ????#SarkaruVaariPaata #SSMB29 pic.twitter.com/EPyLdr8sRa
— SSMB_BEATZ™ (@ssmb_Beatz) December 10, 2021