சினிமா செய்திகள்

புதையலை தேடும் எஸ்.எஸ்.ராஜமெளலியின் அடுத்த படம்: பட்ஜெட் எவ்வளவு தெரியுமா?

Published

on

பாகுபலி ,பாகுபலி 2, ஆர்.ஆர்.ஆர் ஆகிய பிரம்மாண்டமான படங்களை இயக்கிய எஸ்.எஸ்.ராஜமெளலி அடுத்ததாக புதையலை தேடும் ஒரு பிரமாண்டமான படத்தை உருவாக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இந்த படத்தின் படப்பிடிப்பு முழுக்க முழுக்க ஆப்பிரிக்க காடுகளில் நடைபெறவுள்ளதாகவும் ஆயிரம் கோடி மதிப்புள்ள புதையலை தேடும் கும்பலுக்கும் அந்த கும்பலை கண்டுபிடித்து புதையலை அரசாங்கத்திடம் ஒப்படைக்க முயற்சிக்கும் அரசு அதிகாரிக்கும் இடையே நடக்கும் போராட்டம் தான் இந்த படத்தின் கதை என்று கூறப்படுகிறது.

மகேஷ்பாபு ஹீரோவாக நடிக்கும் இந்த படத்தில் பல தென்னிந்திய மற்றும் வட இந்திய பிரபலங்கள் நடிக்கவிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படத்தின் பட்ஜெட் 500 முதல் 600 கோடி என்றும் பான் இந்தியா திரைப்படமாக உருவாக்குவது மட்டுமன்றி இந்த படத்தை ஆங்கிலத்திலும் உருவாக்க எஸ்.எஸ்.ராஜமெளலி திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

எஸ்எஸ் ராஜமவுலியின் முந்தைய படங்களான பாகுபலி 2 மற்றும் ஆர்.ஆர்.ஆர் ஆகிய படங்கள் ஆயிரம் கோடி வசூல் செய்த நிலையில் இந்த படத்தை 2 ஆயிரம் கோடி வசூல் செய்ய வேண்டும் என்ற இலக்குடன் படக்குழுவினர் களமிறங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கி விட்டதாகவும் 2023 ஆம் ஆண்டு இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.

 

seithichurul

Trending

Exit mobile version