தமிழ்நாடு
ஸ்ரீவில்லிபுத்தூர் காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் கொரோனாவுக்கு பலி!
ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலில் ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் போட்டியிட்ட மாதவராவ் என்பவர் சமீபத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டார் என்பதும் இதனையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார் என்பதும் தெரிந்ததே.
கொரோனாவால் பாதிக்கப்பட்டதால் மாதவராவ் பிரச்சாரம் கடைசி நேரத்தில் பிரச்சாரம் செய்யவில்லை என்பதும் வாக்களிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அவர் இன்று காலை சிகிச்சை பலனின்றி காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் காங்கிரஸ் தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் அவருக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் இருந்த நிலையில் வெற்றி பெறும் நிலையில் அவர் உயிரிழந்துள்ளது காங்கிரஸ் கட்சிக்கும் கட்சியின் தொண்டர்களுக்கும் பேரதிர்ச்சியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. உயிரிழந்த காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் அவர்களுக்கு காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.