தமிழ்நாடு

19 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் அபூர்வ வைகுண்ட ஏகாதேசி: ஸ்ரீரங்கத்தில் குவிந்த பக்தர்கள்!

Published

on

19 ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழும் அபூர்வ வைகுண்ட ஏகாதசி இன்று நிகழ்ந்ததை அடுத்து ஸ்ரீரங்கத்தில் திறக்கப்பட்ட சொர்க்க வாசலை காண பக்தர்கள் குவிந்துள்ளனர்.

பொதுவாக ஒவ்வொரு ஆண்டும் வைகுண்ட ஏகாதசி என்பது மார்கழி மாதத்தில்தான் வரும். ஆனால் 19 ஆண்டுகளுக்கு ஒருமுறை வைகுண்ட ஏகாதசியில் கார்த்திகை மாதமே வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த அபூர்வ நிகழ்வை குறிக்கும் வகையில் ஸ்ரீரங்கத்தில் கார்த்திகை மாதமே திறக்கப்படும் சொர்க்க வாசலை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் கார்த்திகை மாதம் இருபத்தி எட்டாம் தேதி ஆன இன்று வைகுண்ட ஏகாதேசி திறக்கப்பட்டுள்ளதை அடுத்து ஸ்ரீரங்கத்தில் இன்று அதிகாலை பக்தர்கள் குவிந்தனர். இன்று அதிகாலையில் ஸ்ரீரங்கத்தில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டதும், ரங்கநாதர் சுவாமியை ஆயிரக்கணக்கான ஆயிரக்கணக்கான வழிபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீரங்கம் மட்டுமன்றி பல பெருமாள் கோவில்களில் இன்று சொர்க்கவாசல் திறக்கப்பட்டது என்பதும் பக்தர்கள் பக்தி பரவசத்துடன் வழிபட்டனர் என்பது குறிப்பிடதக்கது.

Trending

Exit mobile version