தமிழ்நாடு

சென்னையில் 14 ஆண்டுகளுக்குப் பின் இன்று ஸ்ரீநிவாச திருக்கல்யாணம் !

Published

on

சென்னையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ஸ்ரீனிவாச திருக்கல்யாணம் நடைபெறும் என்பதும் மதுரை மீனாட்சி திருக்கல்யாணத்திற்கு இணையாக இந்த திருக்கல்யாண வைபவத்தில் பக்தர்கள் கூடி தரிசிப்பார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆனால் கடந்த 13 ஆண்டுகளாக இந்த ஸ்ரீனிவாச திருக்கல்யாணம் நடைபெறாமல் இருந்த நிலையில் இந்த ஆண்டு திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஸ்ரீநிவாச திருக்கல்யாணத்தை நடத்த முடிவு செய்தது.

இந்த நிலையில் சென்னை தீவு திடலில் இன்று ஸ்ரீனிவாச திருக்கல்யாணம் நடைபெற உள்ளது. இந்த திருக்கல்யாணத்திற்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் சுமார் 3,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் .

சென்னையில் 14 ஆண்டுகளுக்கு பிறகு திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் சீனிவாச திருக்கல்யாணம் நடைபெறும் உள்ளதை அடுத்து பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்பது பெறப்பட்டது.

 

Trending

Exit mobile version