கிரிக்கெட்

2வது டி20 போட்டி: கடைசி ஓவரில் இலங்கை த்ரில் வெற்றி!

Published

on

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே நேற்று நடைபெற்ற 2வது டி20 போட்டியில் இலங்கை அணி கடைசி ஓவரில் திரில் வெற்றி பெற்றது. இதனை அடுத்து இந்த தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

நேற்றைய போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்து வீச முடிவு செய்ததையடுத்து இந்திய அணி பேட்டிங் செய்ய களத்தில் இறங்கியது. இந்திய அணியின் ருத்ராஜ் கெய்க்வாட், தவான் மற்றும் படிக்கல் ஆகிய மூவரும் நல்ல தொடக்கத்தை கொடுத்தனர்

ஆனால் அதன்பின் விளையாடிய சஞ்சு சாம்சன், நிதிஷ் ராணா உள்ளிட்டோர் ரன்களை எடுக்க தவறியதன் காரணமாக இந்திய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 132 ரன்கள் மட்டுமே எடுத்தது

இதனையடுத்து 133 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய இலங்கை 19.4 ஓவரில் 133 ரன்கள் எடுத்து கடைசி ஓவரில் த்ரில் வெற்றி பெற்றது. இலங்கை அணியின் டி சில்வா 40 ரன்களும் பனுகா 36 ரன்களும் எடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த வெற்றியின் மூலம் இந்தியா – இலங்கை டி20 கிரிக்கெட் தொடர் தற்போது 1-1 என்ற சமநிலையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்று நடைபெற இருக்கும் மூன்றாவது மற்றும் இறுதி டி20 கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெறும் அணி இந்த தொடரை வெல்லும் அணி என்பது குறிப்பிடத்தக்கது.

 

seithichurul

Trending

Exit mobile version