கிரிக்கெட்

இலங்கையின் தோல்வியை காப்பாற்றிய மழை: தொடரை வென்ற இங்கிலாந்து!

Published

on

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நேற்று நடைபெற்ற நிலையில் இந்த போட்டியின் பின்பாதியில் மழை பெய்ததால் இலங்கை தோல்வியில் இருந்து தப்பித்தது

நேற்றைய போட்டியில் இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்து 41.1 ஓவரில் 166 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அதிகபட்சமாக தசன் சனகா 48 ரன்கள் அடித்திருந்தார். இந்த நிலையில் 167 என்ற எளிய இலக்குடன் களமிறங்க இங்கிலாந்து தயாராக இருந்தது

மிக எளிதில் இந்த போட்டியை இங்கிலாந்து வென்று விடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென மழை பெய்தது. இதனால் இங்கிலாந்து அணி பேட்டிங் செய்ய முடியாமல் போனதால் போட்டி ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதனால் மழை காரணமாக இலங்கை அணியை தோல்வியில் இருந்து தப்பிப்பது என்பது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும் மூன்று போட்டிகள் கொண்ட இந்த தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் இங்கிலாந்து அணி வென்றதை அடுத்து இங்கிலாந்து அணி 2-0 என்ற கணக்கில் தொடரை வென்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தொடரின் நாயகனாக டேவிட் வில்லி தேர்வு செய்யப்பட்டார்.

இந்த நிலையில் தோல்வி முகத்துடன் நாடு திரும்பும் இலங்கை அணி வரும் 16ஆம் தேதி இந்திய அணியுடன் முதல் ஒருநாள் போட்டியில் மோதவுள்ளது என்பதும் இந்த போட்டி கொழும்பில் நடைபெறவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

author avatar
seithichurul

Trending

Exit mobile version