உலகம்

தனிநாடு கொடுத்தால் பணம் கொடுத்து வாங்க தயார்: இலங்கை வட மாகாண முதல்வர் பேட்டி

Published

on

இலங்கையில் உள்ள வடக்கு கிழக்கு பகுதிகளை தமிழர்களுக்கு என தனிநாடாக பிரித்துக் கொடுத்தால் அதை பணம் கொடுத்து விலைக்கு வாங்க தயாராக இருக்கிறோம் என வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .

இலங்கையில் தற்போது வரலாறு காணாத பொருளாதாரச் சரிவு ஏற்பட்டுள்ள நிலையில் இந்தியா உள்பட பல நாடுகள் இலங்கைக்கு உதவி செய்து வருகின்றன.

இந்நிலையில் இலங்கையின் கடன் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருப்பதற்கு காரணம் தமிழர்கள் மீது தொடுக்கப்பட்ட போர் தான் என்றும் 30 ஆண்டுகால போருக்காக இலங்கை அரசு ஏராளமான கடன்களை பெற்றது என்றும் அந்த கடன்களுக்கு வட்டி கட்ட மேலும் கடன் வாங்கியது என்றும் வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார் .

தற்போது வடக்கு கிழக்கு என இரண்டு தமிழ் மாகாணங்களையும் தமிழர்களுக்கு என தனியாக பிரித்துக் கொடுத்தால் எங்களுடைய புலம்பெயர் தமிழர்கள் அதனை பணம் கொடுத்து விலைக்கு வாங்க தயாராக உள்ளனர் என்றும் அவர் கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

seithichurul

Trending

Exit mobile version