உலகம்

வேற வழியே இல்லை.. கடைசியில் இந்தியாவிடமே உதவியை கேட்ட இலங்கை.. ஆதரவு கிடைக்குமா?

Published

on

கொழும்பு: அடுத்த வாரம் ஜெனீவாவில் நடைபெறும் ஐ.நா மனித உரிமைகள் பேரவை அமர்வின் போது, இலங்கையில் 2009 ஆம் ஆண்டு உள்நாட்டு போர் சமயத்தில் நிகழ்த்தப்பட்ட மனித உரிமை மீறல்கள் மற்றும் அதில் அரசின் பொறுப்புகள் குறித்து விசாரிக்கப்பட உள்ள நிலையில் இதில் இந்தியாவின் உதவியை இலங்கை நாடியுள்ளது.

சமீப காலங்களில் இந்தியா – இலங்கை இடையேயான உறவு அவ்வளவு சுமூகமானதாக இல்லை. சீனாவின் கை அங்கு ஓங்கி வருவதால் இந்தியாவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்தும் முயற்சியில் ராஜபக்சே சகோதரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். ஏற்கனவே கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனைய விவகாரத்தில் இந்தியாவுக்கு எதிராக இவர்கள் நடந்து கொண்டனர்.

பின்னர், இந்தியாவுக்கு மிக அருகில் இருக்கும் கச்சத்தீவு பகுதிகளில் மிகப்பெரிய காற்றாலை அமைக்கும் திட்டத்திற்கு சீனாவுக்கு அனுமதி வழங்கினர். இந்தியாவின் கேந்திர பாதுகாப்புக்கு இது பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் என தெரிந்தும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதையடுத்து, திருகோணமலையில் இந்தியா வசம் இருந்த எரிபொருள் எண்ணெய் சேமிப்பு கிடங்குகளையும் இப்போது இலங்கை திரும்பப் பெறுகிறது .

Also Read: எச்-1 பி விசா வைத்திருக்கும் இந்தியர்களுக்கு அடித்த ஜாக்பாட்.. பைடன் நிர்வாகத்தின் புதிய அறிவிப்பு!

இப்படி இருநாடுகளுக்கும் இடையிலான உறவில் உரசல் நீடித்துவரும் நிலையில் தான் அடுத்தவாரம் ஐநா மனித உரிமைகள் கவுன்சிலில் நடக்கும் விசாரணையில் இந்தியாவின் ஆதரவை இலங்கை கோரியுள்ளது. தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி கொடுத்த இலங்கை வெளியுறவு அமைச்சக நிரந்தர செயலாளர் ஜெயநாத் கொலம்பேஜ் இதனை தெரிவித்தார்.

இந்த விவகாரத்தில் இலங்கை ஆதரவுக்காக திரும்பிய முதல் நாடு இந்தியா. மாண்புமிகு இந்தியப் பிரதமரின் உதவியைக் கோரி நாங்கள் ஒரு சிறப்பு அறிக்கையை அனுப்பியுள்ளோம். பிராந்திய ஒற்றுமைக்காக இந்தியா இலங்கையை ஆதரிக்கும் என்றும் கொலம்பேஜ் உறுதிபட தெரிவித்தார்.

சில வலிமை வாய்ந்த நாடுகளின் தேவையற்ற தலையீடு இது. எங்கள் நாடு இப்போது அமைதியான ஜனநாயக தேசமாக இருக்கும்போது, முடிந்து போன போரின் காலத்தை பற்றி இன்னும் பேசிக்கொண்டு இருக்கின்றனர் என்றும் அவர் தெரிவித்தார்.

இலங்கையின் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக விசாரிக்க அடுத்தவாரம் நடைபெறும் அமர்வில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்படும் என ஐநா மனித உரிமைகள் அமைப்பின் மைய குழு ஒரு அறிக்கையில் கூறியிருந்ததையடுத்து இப்போது இலங்கை ஆதரவை தேடும் முயற்சியில் இறங்கியுள்ளது.

இந்தியாவை தவிர்த்து ரஷ்யா மற்றும் சீனாவின் ஆதரவையும் இலங்கை நாடியுள்ளது. இருப்பினும் இந்த விவகாரத்தில் இந்தியா என்ன மாதிரியான நிலைப்பாட்டை எடுக்கும் என்பது உறுதியாகவில்லை. ஒருபக்கம் இந்தியாவுக்கு எதிரான வேளைகளில் ஈடுபட்டு மறுபக்கம் இந்தியாவின் ஆதரவை கோரும் இலங்கையின் முடிவுக்கு இந்தியா என்ன பதில் கொடுக்கும் என்பது இனி வரும் நாட்களில் தெரிய வரும்.

author avatar
seithichurul

Trending

Exit mobile version