உலகம்
இலங்கை தமிழர்களின் சாபம்தான் மகிந்தா குடும்பத்தை ஓட ஓட விரட்டுகிறதா?
இலங்கை தமிழர்களின் சாபம்தான் மகிந்த ராஜபக்ச குடும்பத்தை ஓட ஓட விரட்டுகிறது என வெளிநாட்டு வாழ் இலங்கை தமிழர்கள் கூறிவருகின்றனர் .
கடந்த 2009 ஆம் ஆண்டு முடிவடைந்த விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் விடுதலைப்புலிகள் ஒட்டுமொத்தமாக கொல்லப்பட்டனர். விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் மற்றும் அவரது மகன் உள்பட குடும்பத்தினர்களும் கொல்லப்பட்டார்கள் என கூறப்படுகிறது.
எஞ்சியிருந்த இலங்கை தமிழர்கள் பலர் வெளிநாடுகளுக்கு அகதிகளாக தப்பிச் சென்று விட்டனர் என்றும் அவர்கள் அனைவரும் நல்ல வசதியுடன் இன்று இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது .
ராஜபக்ச குடும்பம் மற்றும் கோத்தபாய ராஜபக்ச குடும்பம் இனி இலங்கையில் வெளியே நடமாட முடியாத நிலைக்கு சென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.