கிரிக்கெட்
ரொம்ப மோசங்க.. இந்திய அணியில் தூக்கி அடிக்கப்படும் இளம் வீரர்.. ஆக்சனில் இறங்கும் பிசிசிஐ
சென்னை: இந்திய அணியின் இளம் வீரர் ஒருவர் நான்காவது டெஸ்ட் போட்டியில் இருந்து நீக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடர் தற்போது நடந்து வருகிறது. இந்த தொடரில் இந்திய ஏற்கனவே கோப்பை வென்றுவிட்டது.ஆம் 4 போட்டிகள் கொண்ட தொடரில் ஏற்கனவே 2 போட்டிகளில் இந்திய அணி வென்றுவிட்டது.
இதனால் இந்திய அணி இனி கோப்பையை இழக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படாது. அதே சமயம் 3வது டெஸ்ட் போட்டியில் தோல்வி அடைந்துவிட்டது. இதனால் இந்திய அணிக்கு கொஞ்சம் கடுமையான சூழல் நிலவி வருகிறது. அதோடு இந்திய ஆணின் வீரர்களின் பேட்டிங் மீதும் கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகிறது. இதையடுத்தே தற்போது இளம் வீரர் ஒரு அணியில் இருந்து நீக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
இந்திய அணியில் டெஸ்ட் போட்டிகளில் பண்ட்தான் கீப்பராக இருந்தார். ஆனால் அவர் சரியாக ஆடுவது இல்லை. இதனால் பண்டிற்கு பதிலாக கீப்பராக ஸ்ரீகர் பரத் சேர்க்கப்பட்டு இருக்கிறார். ஆனால் இவர் சரியாக ஆடுவது இல்லை. கடந்த போட்டியில் இரண்டாவது இன்னிங்சில் இவர் 3 ரன்கள் மட்டுமே எடுத்தார். முதல் இன்னிங்சில் 17 ரன்கள் மட்டுமே எடுத்தார். கீப்பிங் நன்றாக செய்தாலும் இவரின் பேட்டிங் மோசமாக உள்ளது.
இவர் காரணமாக அணியில் எளிதாக ஒரு விக்கெட்டும் விழுந்து விடுகிறது. மிடில் ஆர்டரில் பொறுமையாக ஆடி இவர் ஆட்டத்தை திசை திருப்படுவது இல்லை. இந்த தொடர் முழுக்க எந்த போட்டியிலும் ஸ்ரீகர் பரத் 20 ரன்களை தாண்டவில்லை. அந்த அளவிற்கு மோசமாக ஆடிக்கொண்டு இருக்கிறார்.
இஷான் கிஷான், சஞ்சு சாம்சன் போன்ற வீரர்கள் வெளியே இருக்கையில் இவர் மட்டும் மோசமாக பேட்டிங் செய்து கொண்டு, இந்திய அணியில் இடம்பிடித்து உள்ளார். இந்த நிலையில்தான் இவர் மீது பிசிசிஐ அப்செட்டில் உள்ளதாகவும். அடுத்த போட்டியில் இவருக்கு வாய்ப்பு வழங்கப்பட சான்ஸ் இல்லை என்றும் கூறுகிறார்கள்.