சினிமா செய்திகள்

சூப்பர் சிங்கர் டைட்டில் வின்னர் யார்? பரத்துக்கு கிடைத்த இன்ப அதிர்ச்சி!

Published

on

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் மிகவும் வரவேற்பைப் பெற்றுள்ள நிகழ்ச்சிகளில் ஒன்று சூப்பர் சிங்கர் என்பது தெரிந்ததே. இந்த நிகழ்ச்சியின் கிராண்ட் ஃபினாலே நேற்று ஒளிபரப்பான நிலையில் இந்த நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் நேற்று அறிவிக்கப்பட்டு அவருக்கு 10 லட்ச ரூபாய் சிறப்பு பரிசும் அளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

சூப்பர் சிங்கர் இறுதிப் போட்டியில் கலந்து கொள்ள 6 பேர் தேர்வு பெற்றனர் என்பதும் அவர்கள் அனு, மானஸா, ஸ்ரீதர் சேனா, முத்துசிற்பி, அபிலாஷ் மற்றும் பரத் ஆகியவர்கள் தங்கள் இரண்டு சுற்றுகளில் வெகுசிறப்பாக பாடல்களை பாடினார்கள்.

அவர்களுக்கு ரசிகர்கள் இணையதளம் மூலம் வாக்குகளை அளித்து வந்த நிலையில் அதிக வாக்குகள் பெற்றவர்களின் அடிப்படையில் ஸ்ரீதர் சேனா, சூப்பர் சிங்கர் சீசன் 8 டைட்டில் வின்னர் ஆக தேர்வு செய்யப்பட்டார். அவரது தேர்வு பார்வையாளர்களுக்கு மட்டுமின்றி நடுவர்களுக்கும் பெரும் ஆச்சரியத்தை அளித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீதர்சேனா கடந்த சில வாரங்களுக்கு முன்னர் போட்டியிலிருந்து எலிமினேட் செய்யப்பட்டார் என்பது தெரிந்ததே. அதன் பின்னர் வைல்டு கார்டு மூலம் ரீஎன்ட்ரி ஆகி தற்போது டைட்டில் பட்டத்தையும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து இரண்டாவது இடம் பரத்துக்கு கிடைத்தது அனைவருக்கும் பெரும் ஆச்சரியத்தை அளித்தது. அனு மற்றும் முத்துசிற்பி ஆகியோர் பரத்தை விட நன்றாக பாடினார்கள் என்று கருத்து நிலவி வரும் நிலையில் பரத்துக்கு 2-வது இடம் கிடைத்துள்ளது. அதேபோல் மேலும் மூன்றாவது இடத்தில் அபிலாஷ்க்கு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை அடுத்து முதலிடம், இரண்டாவது இடம் 3-ஆம் இடம் பெற்ற ஸ்ரீதர் சேனா, பரத் மற்றும் அபிலாஷ் அவர்களுக்கு விஜய் டிவி சார்பில் வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது. மேலும் முதலிடத்தை பிடித்து பிடித்த ஸ்ரீதர்சேனாவுக்கு, அனிருத் இசையில் பாடுவதற்கும் ஒரு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version