சினிமா செய்திகள்
ஏலம் விடப்பட்ட ஸ்ரீதேவியின் புடவை – எவ்வளவு தெரியுமா?
நடிகை ஸ்ரீதேவி மறைந்து ஓராண்டு நிறைவடைந்ததை முன்னிட்டு அவரது விருப்பமான புடவைகளில் ஒன்றான கோட்டா வகை புடவையை ஏலத்துக்கு விட்டு, அதில் கிடைக்கும் நிதியை தொண்டு நிறுவனம் ஒன்றுக்கு தர ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் திட்டமிட்டிருந்தார்.
இதற்காக, பரிசோரா என்ற இணையதளத்தின் உதவியை போனி கபூர் நாடி இருந்தார். ஆரம்ப விலையாக 40,000 ரூபாய் நிர்ணயிக்கப்பட்ட அந்த கோட்டா வகை புடவை இறுதியாக 1.30 லட்சத்துக்கு ஏலம் விடப்பட்டுள்ளது.
கன்சர்ன் இந்தியா பவுண்டேஷன் என்ற தொண்டு நிறுவனத்துக்கு இந்த பணத்தை நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் வழங்கினார்.