இந்தியா

நடிகை ஸ்ரீதேவியின் மரணம் இயற்கையானது அல்ல, திட்டமிட்ட கொலை: பரபரப்பு தகவல்!

Published

on

நடிகை ஸ்ரீதேவி துபாயில் ஒரு திருமண நிகழ்வில் கலந்துகொள்ள சென்றபோது ஹோட்டல் அறையில் குளியலறையில் பிணமாக கிடந்தார். மது போதையில் குளியல் தொட்டியில் ஸ்ரீதேவி விழுந்து இறந்துவிட்டதாக கூறப்பட்டாலும், இது தொடர்பான விசாரணை இன்னமும் நடந்து வருகிறது.

இந்நிலையில் நடிகை ஸ்ரீதேவியின் மரணம் இயற்கையானது அல்ல, அது திட்டமிட்ட கொலை என கேரள டிஜிபி ரிஷிராஜ் கூறியுள்ளார். இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மலையாள நாளிதழ் ஒன்றில் இதுகுறித்து அவர் கட்டுரை ஒன்று எழுதியுள்ளார். அதில், தடயவியல் துறை நிபுணர் டாக்டர் உமாதாதன் என்னுடைய நண்பர். அவர் ஸ்ரீதேவியின் மரணம் குறித்து என்னிடம் கூறியபோது, எதிர்பாராதவிதமாக ஸ்ரீதேவி நீரில் மூழ்கி மரணமடையவில்லை. அது திட்டமிட்ட கொலை என்றார்.

ஒரு அடி ஆழம் மட்டுமே உள்ளே குளியல் தொட்டியில் மூழ்கி யாரும் இறக்க முடியாது. எவ்வளவு தான் அளவுக்கு அதிகமாக மது அருந்தினாலும் அந்த அளவு உள்ள நீரில் மூழ்க முடியாது. யாராவது அவரின் கால்களை பிடித்து, தலையை நீரில் மூழ்கடித்திருக்க வேண்டும் என்றார் தயவியல் நிபுணர் உமாதாதன். இந்த கட்டுரை திரை உலகில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version