இந்தியா

அதிர்ச்சி.. 150 சிபிஐ உயர் அதிகாரிகளுக்கு பல்வேறு பயிற்சி அளித்த சாமியார் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர்!

Published

on

டெல்லி: சிபிஐ உயர் அதிகாரிகள் 150 பேருக்கு கடந்த 3 நாட்களாக சாமியார் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர், தனது வாழும் கலை அமைப்பு மூலம் பல்வேறு பயிற்சிகளை வழங்கி வருகிறார்.

சாமியார் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர், தனது வாழும் கலை அமைப்பு மூலம் இந்த பயிற்சியை வழங்கி வருகிறார்.  கடந்த 9ம் தேதி இந்த பயிற்சி தொடங்கியது. கடந்த மூன்று நாட்களாக நடக்கும் இந்த பயிற்சி இன்று முடிகிறது. சிபிஐ அதிகாரிகள் மட்டும் பயிற்சி பெறும் வகையில் இதற்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

சிபிஐ அதிகாரிகள் தங்களுக்கு ஒற்றுமையுடன் பணியாற்ற வேண்டும். டென்ஷன் இல்லாமல் பணியாற்ற வேண்டும் என்று நிறைய விஷயங்களை மையப்படுத்தி இந்த சிறப்பு பயிற்சி, சிபிஐ அதிகாரிகளுக்கு அளிக்கப்படுகிறது என்று ரவிசங்கர் கூறியுள்ளார்.

150 உயர் ரேங்க் கொண்ட சிபிஐ அதிகாரிகளுக்குத்தான் இந்த பயிற்சி அளித்தார்.

 

 

 

 

seithichurul

Trending

Exit mobile version