தமிழ்நாடு

எனக்கு அடைக்கலம் கொடுத்தது தமிழகம்தான்: புயல் பாதிப்புக்கு நிவாரணம் அளித்த ஸ்ரீரெட்டி!

Published

on

நடிகை ஸ்ரீ ரெட்டி தமிழ் தெலுங்கு மக்கள் மத்தியில் தனது அதிரடியான பாலியல் புகார்கள் மூலம் பிரபலமானவர். தனக்கு பட வாய்ப்பு தருவதாக கூறி ஆசை காட்டி தங்களது பாலியல் தேவைக்கு பயன்படுத்திக்கொண்ட பின்னர் பட வாய்ப்பு தராமல் ஏமாற்றி விட்டனர் என தமிழ், தெலுங்கு திரையுலகை சேர்ந்த பலர் மீதும் சரமாரியாக குற்றச்சாட்டு வைத்தார்.

இதனையடுத்து அவரது குற்றச்சாட்டுக்கு ஆளான ராகவா லாரன்ஸ் அவருக்கு பட வாய்ப்பு அளித்தார். மேலும் ரெட்டி டைரிஸ் என்ற ஒரு படத்திலும் நடித்து வருகிறார் ஸ்ரீ ரெட்டி. இந்நிலையில் அவர் சமீபத்தில் டெல்டா பகுதிகளை கடுமையாக தாக்கிய கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தன்னால் முடிந்த உதவியை செய்துள்ளார்.

இது தொடர்பாக சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ள ஸ்ரீ ரெட்டி, புயலால் பாதிக்கப்பட்ட திருவாரூர் மாவட்டத்தில் 300 பேருக்கு தேவையான நிவாரண பொருட்களை கொடுத்துள்ளேன். இது எனது கடமை. உலகமே என்னை தள்ளிவைத்தபோது, அடைக்கலம் கொடுத்தது தமிழகம்தான் என பதிவிட்டு தனது நன்றி விசுவாசத்தை காட்டியுள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version