Connect with us

கிரிக்கெட்

எங்களுக்கு மட்டும் ஐசிசி பாரபட்சம் பார்க்கிறது: இலங்கை அணி பரபரப்பு குற்றச்சாட்டு!

Published

on

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் இலங்கை அணிக்கு மட்டும் க்ரீன் பிட்ச் தந்து ஐசிசி பாரபட்சம் பார்க்கிறது என இலங்கை அணியின் மேனேஜர் கடுமையான குற்றச்சாட்டை வைத்துள்ளார்.

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் தற்போது லீக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் நான்கு போட்டிகளில் விளையாடியுள்ள இலங்கை அணி 4 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்தில் உள்ளது. இதில் முதல் ஆட்டத்தில் நியூசிலாந்து அணியை புற்கள் நிறைந்த க்ரீன் பிட்சில் எதிர்கொண்ட இலங்கை அணி படுதோல்வியடைந்தது. இரண்டாவது போட்டியில் ஆஃப்கானிஸ்தான் உடன் மழையால் டெக்வெர்த் லீவீஸ் விதிப்படி போராடி வென்றது.

மற்ற இரண்டு ஆட்டங்களும் மழையால் கைவிடப்பட்டது. இந்த ஆடுகளங்களும் பந்துவீச்சிற்கு சாதகமாக புற்கள் நிறைந்ததாகவே காணப்பட்டதாக இலங்கை குற்றச்சாட்டை வைக்கிறது. இந்நிலையில் இன்று லண்டன் ஓவல் மைதானத்தில் இலங்கை அணி ஆஸ்திரேலியா அணியை சந்திக்கிறது. இது தொடர்பாக பேசிய இலங்கை அணியின் மேனேஜர் அஷாந்தா டி மெல், லண்டன் ஓவலில் 300 ரன்களுக்கு மேல் எளிதாக எடுக்கப்பட்டு வருகிறது. ஆனால், இந்த ஆடுகளம் புற்கள் நிறைந்து காணப்படுவது போல் தெரிகிறது. இதனால் ஐசிசி பாரபட்சம் பார்க்கிறது.

நாங்கள் விளையாடிய நான்கு போட்டிக்கான ஆடுகளங்களும் புற்கள் நிறைந்து காணப்பட்டது. ஐசிசி எங்களுக்காக க்ரீன் பிட்ச் தயார் செய்துள்ளது. கடந்த நான்கு போட்டிகளும் இதைத்தான் காட்டுகிறது. அதே மைதானத்தில் மற்ற அணிகள் மோதும் பிட்ச் புற்கள் காய்ந்து, பேட்ஸ்மேன்களுக்கு சாதகமான வகையில் தயார் செய்யப்பட்டுள்ளது. ஆனால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்திற்கான பிட்ச் க்ரீனாக உள்ளது. இதுபற்றி நாங்கள் புகார் அளிக்கிறோம். ஐசிசி நடத்தும் தொடரில் ஒரு குறிப்பிட்ட அணிக்கெதிராக மட்டும் ஒரு குறிப்பிட்ட ஆடுகளமும், மற்ற அணிகளுக்கு வேறுவிதமான ஆடுகளங்களும் தயார் செய்யப்படுவது நியாயமானது அல்ல.

கார்டிப் போட்டிக்கான பயிற்சியின்போது மூன்று வலைகளுக்குப் பதிலாக இரண்டு வலைகள் மட்டுமே தயார் செய்து தந்தனர். நாங்கள் தங்கிய ஓட்டலில் நீச்சல் குளம் இல்லை. வேகப்பந்து வீச்சாளர்கள் ரிலாக்ஸ் ஆக நீச்சல் குளம் ஒவ்வொரு அணிகளுக்கும் தேவை இவ்வாறு கடுமையான குற்றச்சாட்டுகளை வைத்துள்ளார் இலங்கை அணியின் மேனேஜர். ஆனால் இதனை ஐசிசி தரப்பு மறுத்துள்ளது.

author avatar
seithichurul
வணிகம்3 மணி நேரங்கள் ago

ஜியோவின் புதிய OTT திட்டங்கள்: அதிரடி சலுகைகள்!

தமிழ்நாடு4 மணி நேரங்கள் ago

ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சியால் போக்குவரத்து மாற்றம்!

வேலைவாய்ப்பு4 மணி நேரங்கள் ago

அரசு வேலைக்கு தட்டச்சு பயிற்சி அவசியம்: தேர்வர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

ஆன்மீகம்4 மணி நேரங்கள் ago

சனி பகவானின் ஆசிர்வாதம்: கிச்சடி உணவின் ஆன்மீக முக்கியத்துவம்!

இந்தியா6 மணி நேரங்கள் ago

ஐபோன் விலையில் அதிரடி குறைப்பு!

வேலைவாய்ப்பு6 மணி நேரங்கள் ago

ESIC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

செய்திகள்6 மணி நேரங்கள் ago

BSNL-க்கு மாறி வருகிறார்கள்: ஜியோ, ஏர்டெல் கவலை!

சினிமா6 மணி நேரங்கள் ago

ராயன் படத்தின் முதல் நாள் வசூல் கலக்கு! ரூ.12 கோடிக்கும் மேல்!

வேலைவாய்ப்பு6 மணி நேரங்கள் ago

ரூ.35,000/- சம்பளத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்6 மணி நேரங்கள் ago

வேப்பிலை முதல் துளசி வரை: இயற்கையின் இரத்த சர்க்கரை கட்டுப்பாட்டு மருந்துகள்!

பல்சுவை5 நாட்கள் ago

“கேரளா ஸ்டைல் கடலை கறி: சுவையான மற்றும் சத்தான குழம்பு”!

வணிகம்4 நாட்கள் ago

மின்னல் வேகத்தில் குறையும் தங்கம் விலை (23/07/2024)!

வணிகம்3 நாட்கள் ago

திடீர் எனச் சரிந்து வரும் தங்கம் விலை (24/07/2024)!

வணிகம்7 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலையில் மாற்றமில்லை (21/07/2024)!

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

3,789 கிராம அஞ்சல் பணியாளர் பணியிடங்கள்: தமிழ்நாட்டில் அபார வாய்ப்பு!

வணிகம்4 நாட்கள் ago

பட்ஜெட் 2024-25-இல் ஸ்டார்ட்அப்-களுக்கு அடித்த ஜாக்பாட்!

வணிகம்5 நாட்கள் ago

2024 பட்ஜெட்: விலை குறையும், அதிகரிக்கும் பொருட்கள்

வணிகம்6 நாட்கள் ago

தினமும் 14 மணிநேர வேலைக்கு அனுமதி கேட்கும் ஐடி நிறுவனங்கள்.. கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் ஊழியர்கள்!

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

வணிகம்4 நாட்கள் ago

பட்ஜெட் 2024: உங்கள் குழந்தையின் எதிர்காலத்திற்காக முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? புதிய திட்டம் – என்.பி.எஸ். வாத்ஸல்யா