Connect with us

உலகம்

வேலைநீக்க அறிவிப்பை வெளியிட்ட இன்னொரு அமெரிக்க நிறுவனம்.. இந்தியர்களுக்கு பெரும் பாதிப்பு..!

Published

on

தினந்தோறும் ராசிபலன் பார்ப்பது போல் தினந்தோறும் வேலைநீக்க நடவடிக்கையை பார்க்கும் நிலை வந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. கூகுள் மைக்ரோசாப்ட் உள்ளிட்ட பல நிறுவனங்கள் வேலை நீக்க அறிவிப்பை வெளியிட்ட நிலையில் தற்போது சின்ன சின்ன நிறுவனங்களும் வேலை நீக்க அறிவிப்பை வெளியிட்டு வருகின்றன.

தினமும் ஒன்று அல்லது இரண்டு நிறுவனங்கள் உலக அளவில் வேலை நீக்க அறிவிப்பை வெளியிடுகிறது என்பதும் இதனால் ஏராளமான ஊழியர்கள் வேலை இழந்து வருகின்றனர் என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் அமெரிக்காவை சேர்ந்த முக்கிய நிறுவனங்களில் ஒன்றான Sprinklr என்ற நிறுவனம் தனது உலகளாவிய பணியாளர்களில் நான்கு சதவீதம் ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளதாக அறிவித்துள்ளது.

கடந்த வாரம் பணி நீக்க நடவடிக்கையை தொடங்கியதாகவும் இந்த வாரம் இது குறித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளதாகவும் Sprinklr நிறுவனத்தின் செய்தி குறிப்பு தெரிவித்துள்ளது. இந்தியா, அமெரிக்கா உட்பட உலகின் பல பகுதிகளில் Sprinklr நிறுவனத்தின் கிளைகள் இருக்கும் நிலையில் மிக அதிக அளவில் வேலை நீக்க நடவடிக்கையில் பாதிக்கப்பட்டது இந்தியர்கள் தான் என்று கூறப்படுகிறது.

இந்த முடிவுகளை எடுப்பது தங்களுக்கு மிகவும் கடினமானது என்றாலும் மாறிவரும் பொருளாதார மந்த நிலை, பணவீக்கம் ஆகியவற்றின் அடிப்படையில் நிறுவனத்தின் வெற்றிக்காக எடுக்கப்பட்ட சரியான முடிவாக பார்க்கப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் எங்கள் ஊழியர்கள் மிகுந்த அக்கறையுடனும் மரியாதையுடனும் பணி செய்தார்கள் என்றும் அவர்களுடைய பங்களிப்புக்கு எங்களது நன்றிகள் என்றும் வேலை நீக்கம் செய்யப்படும் ஊழியர்களுக்கு தேவையான உதவிகள் அனைத்தும் வழங்கப்படும் என்றும் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

பிப்ரவரி 7ஆம் தேதி Sprinklr நிறுவனம் தனது வேலை நீக்க நடவடிக்கையை அறிவித்ததாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ஆனால் அதே நேரத்தில் வேலை நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களின் எண்ணிக்கையை குறித்து Sprinklr தனது அறிக்கையில் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஜனவரி மாதத்தின் இந்நிறுவனத்தில் உலக அளவில் மொத்தம் 3245 பணியாளர்கள் பணி செய்து கொண்டிருந்தார்கள் என்றும் இதில் இந்தியர்கள் மட்டும் 1800 பேர் என்றும், அமெரிக்கர்கள் 933 பேர் என்றும் தெரிகிறது. வேலைநீக்கம் செய்யப்பட்டவர்களில் பெரும்பாலும் இந்தியர்களாக இருக்கலாம் என்று கூறப்படுவதால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

author avatar
seithichurul
ஆரோக்கியம்1 மணி நேரம் ago

பப்பாளி பழத்துடன் சேர்த்து சாப்பிடக் கூடாத 5 உணவுகள்!

இந்தியா3 மணி நேரங்கள் ago

நிதி ஆயோக் கூட்டத்தில் மம்தா பானர்ஜி மைக் ஆஃப்! கடுப்புடன் வெளியேறினார்!

தினபலன்9 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன் : சனிக்கிழமை (27-07-2024)

விமர்சனம்20 மணி நேரங்கள் ago

ராயன் திரை விமர்சனம் | Raayan – Movie Review

ஆன்மீகம்23 மணி நேரங்கள் ago

ஆடி கிருத்திகைக்கு திருத்தணி முருகன் கோயில் கட்டணச் சலுகை!

ஆன்மீகம்23 மணி நேரங்கள் ago

சங்கடஹர சதுர்த்தி: தேனியில் விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம்!

கிரிக்கெட்23 மணி நேரங்கள் ago

IND vs SL 2024: முதல் T20-ல் மழை இல்லை, வானிலை சாதகமாக உள்ளது!

சினிமா24 மணி நேரங்கள் ago

ரஜினிகாந்த்: பேரனுக்காக ஒரு அன்பான தாத்தா!

செய்திகள்24 மணி நேரங்கள் ago

வாட்ஸ்அப்பில் புதிய மாற்றம்: இன்ஸ்டாகிராம் ஸ்டைல் மென்ஷன் வசதி!

ஆன்மீகம்1 நாள் ago

ஆடி மாதத்தில் அம்மன் கோவிலில் கூழ் ஊற்றுவது ஏன்? – ஒரு விரிவான பார்வை

பல்சுவை5 நாட்கள் ago

“கேரளா ஸ்டைல் கடலை கறி: சுவையான மற்றும் சத்தான குழம்பு”!

வணிகம்4 நாட்கள் ago

மின்னல் வேகத்தில் குறையும் தங்கம் விலை (23/07/2024)!

ஆன்மீகம்7 நாட்கள் ago

ஆடி பௌர்ணமி சிறப்புகள் என்ன?

வணிகம்6 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலையில் மாற்றமில்லை (21/07/2024)!

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

3,789 கிராம அஞ்சல் பணியாளர் பணியிடங்கள்: தமிழ்நாட்டில் அபார வாய்ப்பு!

வணிகம்3 நாட்கள் ago

திடீர் எனச் சரிந்து வரும் தங்கம் விலை (24/07/2024)!

வணிகம்4 நாட்கள் ago

பட்ஜெட் 2024-25-இல் ஸ்டார்ட்அப்-களுக்கு அடித்த ஜாக்பாட்!

வணிகம்4 நாட்கள் ago

2024 பட்ஜெட்: விலை குறையும், அதிகரிக்கும் பொருட்கள்

வணிகம்6 நாட்கள் ago

தினமும் 14 மணிநேர வேலைக்கு அனுமதி கேட்கும் ஐடி நிறுவனங்கள்.. கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் ஊழியர்கள்!

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!