தமிழ்நாடு

வாக்காளர் அட்டையில் திருத்தம்: சென்னையில் இன்று சிறப்பு முகாம்கள்!

Published

on

வாக்காளர் அடையாள அட்டையில் திருத்தம் செய்ய இன்று சென்னையில் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வாக்காளர் அட்டையில் பெயர் சேர்க்க, நீக்க மற்றும் திருத்தம் செய்ய ஆகியவைகளுக்கு மாநகராட்சி அலுவலகம் செல்ல வேண்டிய நிலை இருந்தது. ஆனால் தற்போது சென்னையில் வாக்காளர் அடையாள அட்டையில் திருத்தம் செய்ய இன்று சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.

கடந்த வாரமே இந்த சிறப்பு முகாம்கள் நடைபெற இருந்த நிலையில் கனமழை மற்றும் புயல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. இதனை அடுத்து இன்று சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரண்டு நாட்களும் வாக்காளர் அட்டை திருத்தம் செய்ய சென்னையில் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரைப்படி அமைக்கப்பட்டுள்ள இந்த சிறப்பு மையங்கள் சென்னையில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் நடைபெறும் என்றும் இதனை வாக்காளர்கள் பயன்படுத்தி பெயர் நீக்கம் பெயர் சேர்த்தல் திருத்தம் உள்ளிட்டவற்றை செய்து கொள்ளலாம் என்றும் தமிழக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Trending

Exit mobile version