Connect with us

தமிழ்நாடு

“நமக்குள்ள இருப்பது அண்ணன், தம்பி பிரச்சனப்பா”- சசிகலாவுக்கு சிக்னல் கொடுத்த அமைச்சர் வேலுமணி; அதிர்ச்சியில் எடப்பாடி!

Published

on

சசிகலா, சிறையிலிருந்து வெளியே வந்து தீவிர அரசியலில் ஈடுபட உள்ள நிலையில், ‘நாம் அனைவரும் ஒற்றுமையாக இருந்து பணியாற்ற வேண்டும். நமது பொது எதிரி திமுக தான்’ என்று மறைமுகமாக சசிகலா இணைப்புக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார் தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி.

சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை முடிந்து வெளியே வந்த சசிகலா, ‘அன்புக்கு நான் அடிமை, கொண்ட கொள்கைக்கு நான் அடிமை. தமிழக மக்களுக்கும், தொண்டர்களுக்கும் நான் அடிமை. எத்தனை தடைகள் வந்தாலும் அதை புரட்சித் தலைவியின் ஆசி கொண்டு வெற்றி பெறுவோம்.

இந்த மாபெரும் இயக்கம் சிலரின் சொந்த விருப்பு வெறுப்புகளால் சிதைந்து விடக் கூடாது. நமது பொது எதிரியை ஆட்சிக் கட்டிலில் அமர விடாமல் வீழ்த்த ஒற்றுமையோடு செயல்பட வேண்டும் என்பதே எனது எண்ணம்.

இதய தெய்வம் புரட்சித் தலைவியின் பிள்ளைகள் என்றும் எனக்கும் பிள்ளைகள் தான். புரட்சித் தலைவி வழி வந்த ஒரு தாய் பிள்ளைகள் ஒற்றுமையோடு செயல்படடுவதே என் விருப்பம். கழகம் எத்தனையோ முறை சோதனைகளை சந்தித்திருக்கிறது. அப்போதெல்லாம் பீனிக்ஸ் பறவை போல மீண்டு வந்திருக்கிறது’ என்று அனைத்துத் தரப்பும் ஒற்றுமையாக இணைந்து செயல்பட வேண்டும் என்பதையே வலியுறுத்திப் பேசியுள்ளார். அதாவது அதிமுகவுக்குள் குழப்பங்கள் வேண்டாம், பொது எதிரியான திமுகவை வீழ்த்துவோம் என்கிற அறைகூவலையே அவர் விடுத்துள்ளார்.

அதற்கு சம்மதம் தெரிவிக்கும் வகையில் அதிமுக பொதுக் கூட்டம் ஒன்றில் பேசியுள்ள அமைச்சர் வேலுமணி, ‘நாம் அனைவரும் ஒற்றுமையாக இருந்த பணியாற்ற வேண்டும். நமது பொது எதிரி திமுக தான் என்பதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும். நமக்குள் இருப்பது அண்ணன், தம்பி பிரச்சனையாகும். அண்ணன், தம்பிக்குள் ஆயிரம் பிரச்சனை இருக்கலாம், ஆனால் வெளியில் இருந்து பிரச்சனை வரும் போது ஒன்று சேர்ந்து அதை எதிர்கொள்ள வேண்டும். நமக்கு வெளியில் இருக்கும் எதிரி தான் திமுக.

இன்றைக்குத் திமுகவின் ஸ்டாலின், எப்படியாவது ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்று கங்கனம் கட்டித் திரிகிறார். இன்று நமக்கு இருக்கும் மரியாதை, அந்தஸ்து என அனைத்தும் வரும் தேர்தலில் சரியாக பணியாற்ற வில்லை என்றால், காணாமல் போகும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.

 

 

இந்தியா7 மணி நேரங்கள் ago

குஜராத்தில் பரவும் சண்டிபூர் வைரஸ் தொற்று பரவல்.. 5 பேர் உயிரிழப்பு: முழு விவரம்

உலகம்7 மணி நேரங்கள் ago

இதுதான் உலகின் ஒரே சைவ சாப்பாட்டு நகரம் – அசைவ உணவைத் தடை செய்தது ஏன்?

ஜோதிடம்9 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பரிகாரம் பலன்கள் (ஜூலை 18, 2024):

ஆரோக்கியம்9 மணி நேரங்கள் ago

ரொட்டி வாங்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்:

தமிழ்நாடு10 மணி நேரங்கள் ago

பாரம்பரியத்தை போற்றுவோம் – தமிழ்நாடு தின வாழ்த்துக்கள் !

தினபலன்10 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன்கள் – ஜூலை 18, 2024 (வியாழக்கிழமை)

ஆன்மீகம்16 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்16 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்17 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்17 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

ஆன்மீகம்2 நாட்கள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை2 நாட்கள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்1 நாள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்1 நாள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

பல்சுவை5 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

வணிகம்3 நாட்கள் ago

புதுமைக்கான உலக திறன் மையங்களின் மையம் தமிழ்நாடு! 50 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாக்கம்!

சினிமா6 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!