தமிழ்நாடு

எஸ்பி வேலுமணி விவகாரம்: குற்றச்சாட்டப்பட்டவர்களில் ஒருவர் மருத்துவமனையில் அனுமதி!

Published

on

முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி வீடுகளில் இன்று காலை திடீரென லஞ்ச ஒழிப்பு போலீசார் மற்றும் வருமானவரித் துறையினர் அதிரடியாக சோதனை செய்தனர் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

இதனையடுத்து சென்னையில் உள்ள எம்எல்ஏ விடுதியில் உள்ள எஸ்பி வேலுமணி அறையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரிடம் விசாரணை செய்தனர். இந்த விசாரணைக்கு பின்னர் எஸ்பி வேலுமணி உள்ளிட்ட 7 பேர்கள் மற்றும் 10 நிறுவனங்களின் இயக்குனர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் எஸ்பி வேலுமணி உடன் வழக்கு பதிவு செய்யப்பட்டவர்களில் ஒருவரான கேசிபி நிறுவன நிர்வாக இயக்குனர் சந்திர பிரகாஷ் என்பவருக்கு திடீரென உடல் நலக்குறைவு காரணமாக கோவை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது .அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

எஸ்பி வேலுமணி உள்பட 7 பேர்கள் மற்றும் 10 நிறுவனங்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வரும் நிலையில் திடீரென ஒரு நிறுவனத்தின் இயக்குநர் மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இருப்பினும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சந்திரசேகர் அவர்கள் உடல் நலம் தேறிய பிறகு போலீசார் அவரிடம் விசாரணை செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version