தமிழ்நாடு

சுப.உதயகுமார் அதிரடி கைது: குமரியில் பரபரப்பு!

Published

on

கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்ட குழு தலைவர் சுப.உதயகுமார் கன்னியாகுமரி மாவட்டம் கோட்டாரில் அதிரடியாக தமிழக காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த ஆண்டு நடந்த போராட்டத்தில் கலவரம் ஏற்பட்டதை அடுத்து போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். இது தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில் துப்பாக்கிச்சூட்டில் இறந்தவர்களுக்கு நினைவேந்தல் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு நினைவேந்தலில் பங்கேற்பதற்காக தூத்துக்குடி செல்ல முற்பட்டார் கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்ட குழு தலைவர் சுப.உதயகுமார். அப்போது அவரை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கன்னியாகுமரி மாவட்டம் கோடாரில் வைத்து கைது செய்துள்ளது காவல்துறை. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version