சினிமா செய்திகள்

கொரோனாவில் இருந்து மீண்டார் பழம்பெரும் இயக்குனர்: திரையுலகினர் வாழ்த்து!

Published

on

பழம்பெரும் இயக்குனர் கொரோனாவால் சமீபத்தில் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது.

ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த் உள்பட பல முன்னணி நடிகர்களின் படங்களை இயக்கியவர் இயக்குநர் எஸ்பி முத்துராமன் அவர்கள் என்பது தெரிந்ததே. இவர் கடந்த ஏப்ரல் 7ஆம் தேதி கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில் மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர் என்பதும் அவ்வப்போது அவரது உடல் நிலை குறித்த அறிவிப்புகளை மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டு வந்தது என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி கொரோனாவில் இருந்து இயக்குநர் எஸ்பி முத்துராமன் முற்றிலும் குணமடைந்து விட்டதாகவும் இதனை அடுத்து அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து எஸ்பி முத்துராமன் குணமாகி வீடு திரும்பினார். இதனால் திரையுலகினர் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Trending

Exit mobile version