Connect with us

இந்தியா

தங்க பத்திரம் திட்டத்தில் ஏன் முதலீடு செய்யலாம்.. இதோ சில முக்கிய காரணங்கள்..!

Published

on

தங்கப் பத்திரத் திட்டம் நேற்று தொடங்கப்பட்ட நிலையில் இதில் முதலீடு செய்வதற்கு முன் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சில முக்கிய விஷயங்கள் குறித்து தற்போது பார்ப்போம்.

இந்த நிதியாண்டின் 2022-23 தங்கப் பத்திரத் திட்டத்தின் கடைசித் தவணை நேற்று முதல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ. 5,611 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு டிசம்பரில் ஒரு கிராமுக்கு ரூ. 5,409 என விற்பனையான நிலையில் அதனுடன் ஒப்பிடும்போது ஒரு கிராமுக்கு ரூ. 202 அதிகமாகும். மார்ச் 10 வரை தங்க பத்திரங்களை வாங்கி கொள்ளலாம்.

* தங்கப் பத்திரங்கள் இந்திய அரசின் சார்பாக இந்திய ரிசர்வ் வங்கியால் (RBI) வழங்கப்படும் தங்கத்தின் பத்திரங்களாகும்.

* மற்ற டிஜிட்டல் சொத்துக்களில் இருந்து தங்க பத்திரங்கள் வேறுபடுகிறது. ஏனெனில் இது ஆண்டுக்கு 2.50 சதவீத வட்டி விகிதத்தையும் வழங்குகிறது. முதிர்வு நேரத்தில், தற்போதைய சந்தை விலையில் உள்ள தங்கத்தின் மதிப்பு வட்டி வருமானத்துடன் திருப்பித் தரப்படும்.

* தங்கத்தை வாங்குவதற்கான மலிவான வழிகளில் இதுவும் ஒன்றாகும், ஏனெனில் ஜிஎஸ்டி மற்றும் பிற கட்டணங்கள் வெளியீட்டு விலையில் சேர்க்கப்படாது.

* தங்க பத்திரங்களை ஆன்லைனில் வாங்கினால், டிஜிட்டல் முறையில் பணம் செலுத்துபவர்களுக்கு விலை கிராமுக்கு ரூ.50 சலுகை விலை உண்டு.

* இந்தப் பத்திரங்களில் ஒருவர் ஆண்டுக்கு அதிகபட்சம் 4 கிலோ வரை முதலீடு செய்யலாம். குறைந்தபட்ச வரம்பு 1 கிராம் தங்கம் கூட வாங்கி கொள்ளலாம்.

* தங்க பத்திரங்கள் 8 வருட கால அவகாசத்துடன் கிடைக்கும். இருப்பினும், வட்டி செலுத்தும் தேதியில் 5, 6 மற்றும் 7வது ஆண்டுகளில் வெளியேறலாம். முன்கூட்டியே திரும்பப் பெறுவதற்கு, குறைந்தபட்சம் ஒரு நாள் முன்னதாக சம்பந்தப்பட்ட வங்கி அல்லது அஞ்சல் அலுவலகத்தை அணுக வேண்டும்.

* நீங்கள் தங்க பத்திரத்தில் முதலீடு செய்யும் போது, ஒரு ஹோல்டிங் சான்றிதழ் வழங்கப்படும்.

* முதிர்வு காலம் முடிந்த பிறகு தங்க பத்திரங்கள் மூலம் கிடைக்கும் தொகைக்க்கு வரி விதிக்கப்படாது. ஆனால் வாங்கிய தங்க பத்திரங்களை 36 மாதங்களுக்கு முன்பு விற்றால் வரி விதிக்கப்படும்.

ஆன்மீகம்4 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்4 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்4 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்5 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

ரூ.1,09,740/- ஊதியத்தில் JIPMER ஆணையத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்5 மணி நேரங்கள் ago

கேரள சுவையில் நெத்திலி மீன் அவியல்: ஒரு சுவையான ரெசிபி!

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

THDC-ல் வேலைவாய்ப்பு!

செய்திகள்5 மணி நேரங்கள் ago

கர்நாடக தனியார் துறை இடஒதுக்கீடு மசோதா நிறுத்தி வைப்பு: சித்தராமையா அறிவிப்பு

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

ரூ.80,000/- ஊதியத்தில் மத்திய அரசில் ஜாக்பாட் வேலைவாய்ப்பு!

ஆன்மீகம்1 நாள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை1 நாள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்4 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்21 மணி நேரங்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்21 மணி நேரங்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

பல்சுவை4 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா5 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி5 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!