தமிழ்நாடு
இனி ரயில் நிலையங்களில் நீண்ட வரிசையில் காத்திருந்து முன்பதிவில்லா டிக்கெட் பெற வேண்டிய அவசியமில்லை!
இனி ரயில் நிலையங்களில் நீண்ட வரிசையில் காத்திருந்து முன்பதிவில்லா டிக்கெட் பெற வேண்டிய அவசியமில்லை என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
தற்போது புறநகர் ரயில்களில் பயணிக்கும் பயணிகளுக்கு, ரயில் நிலையங்களில் ஆட்டோமெட்டிக் டிக்கெட் வெண்டிங் மெஷின்கள் உள்ளன. ஆனால் வரை அதற்கான ஆர்-வாலெட் கார்டு இல்லாமல் பயன்படுத்த முடியாது.
அதனைச் சரி செய்து இந்த ஆட்டோமெட்டிக் டிக்கெட் விநியோகிக்கும் இயந்திரங்களில் யூபிஐ அல்லது QR குறியீடு பயன்படுத்தி டிக்கெட் கட்டணத்தை புக் செய்யும் சேவையை அறிமுகம் செய்ய உள்ளத்து தெற்கு ரயில்வே.
அதனால் இனி ரயில் நிலையங்களில் உள்ள டிக்கெட் விநியோகிக்கும் இயந்திரங்களில் டிக்கெட் புக் செய்ய போனில் உள்ள கூகுள் பே, போன் பே பொன்ற யூபிஐ செயலிகள் இருந்தால் போதுமானதாக இருக்கும்.
அதற்காக தெற்கு ரயில்வே கோட்டத்துக்கு உரிய முக்கிய ரயில் நிலையங்களில் 254 ஆட்டோஎட்டிக் டிக்கெட் விநியோகிக்கும் இயந்திரங்களைப் புதுப்பித்து யூபிஐ மற்றும் QR சேவையுடன் நிறுவ முடிவு செய்யப்பட்டுள்ளது.
என்ன இனி ரயில் நிலையங்களில் நீண்ட வரிசையில் காத்திருந்து முன்பதிவு இல்லாத டிக்கெட் பெற வேண்டிய அவசியம் இருக்காது தானே.
மேலும் முன்பதிவு இல்லா டிக்கெட்களை யூடிஎஸ் என்ற செயலி மூலமாகவும் புக் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.