தமிழ்நாடு

நாளை முதல் கூடுதல் ரயில்.. தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு!

Published

on

சென்னையில் வார நாட்களில், ஜனவரி 4-ம் தேதி முதல் கூடுதல் ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
கொரோனா தொற்று ஊரடங்கிற்குப் பிறகு, அத்தியாவசிய பணிகளுக்குச் செல்லும் பயணிகளுக்காக மட்டும் சென்னையில் மின்சார ரயில் சேவை வழங்கப்பட்டு வந்தது. பிறகு பெண்களுக்கு, தொடர்ந்து அனைத்து பயணிகளுக்கும் ரயிலில் பயணிக்க தெற்கு ரயில்வே அனுமதி அளித்தது.
தொடக்கத்தில் 120 மின்சார ரயில்கள் மட்டுமே பயன்பாட்டுக்கு வந்தது. பின்னர் அதுவே 150 ஆக அதிகரிக்கப்பட்டது. இப்போது 500 ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. ஜனவரி 4 முதல் கூடுதலாக 160 ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
எனவே சென்னையில் மின்சார ரயில் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும், கூட்ட நெரிசல் குறையும் என்றும் கூறப்படுகிறது.
seithichurul

Trending

Exit mobile version