இந்தியா

தங்கத்தை வாங்கி குவிக்கும் தென்னிந்திய மக்கள்.. 5 மாநிலங்களில் விற்பனை ஜோர்..!

Published

on

இந்தியாவில் தங்கத்தின் தேவை எப்போதுமே அதிகமாக இருந்து வரும் நிலையில் தென்னிந்திய மக்கள் அதிக தங்கங்களை வாங்கி குவித்து வருவதாக உலக தங்க நுகர்வோர் சந்தை தகவல் தெரிவித்துள்ளது.

இந்தியாவைப் பொறுத்தவரை தங்கம் என்பது ஆபரணங்களுக்காக மட்டும் இன்றி சேமிப்புக்காகவும் வாங்கி வருகிறார்கள் என்பதும் தங்கத்தை வாங்கி வைக்கும் சேமிப்பு பழக்கம் கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவில் அதிகரித்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

மியூச்சுவல் பண்ட் உள்ளிட்ட எந்த முதலீடு என்றாலும் அதில் ரிஸ்க் அதிகம் இருக்கும் என்றும் ஆனால் தங்கத்தை பொறுத்தவரை நீண்ட நாள் முதலீட்டில் ரிஸ்க் எதுவும் இல்லை என்றும் கண்டிப்பாக 15 சதவீதம் வரை வருமானம் கொடுக்கும் ஒரு சேமிப்பாக தான் தங்கத்தை பொதுமக்கள் பார்த்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தங்கத்தை ஆபரணங்களாக மட்டுமின்றி தங்க கட்டிகளாகவும் நாணயங்களாகவும் குறைந்த செய்கூலி சேதாரத்துடன் மக்கள் வாங்கி வருவதால் விலை உயரும்போது அவர்களுக்கு மிகப்பெரிய வருமானம் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி பண தேவை ஏற்படும்போது உடனடியாக கையில் இருக்கும் தங்கத்தை அடமானம் வைத்து பணமாக மாற்றிக் கொள்ளும் வசதியும் உள்ளது என்பதும் ஒரு சில நிமிடங்களில் பணம் கிடைத்து விடுவதால் தங்கத்தின் முதலீடு செய்வதில் மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் உலகிலேயே சீனாவில் தான் அதிக அளவு மக்கள் தங்கத்தை வாங்குகிறார்கள் என்ற நிலையில் இரண்டாவதாக இந்தியாவில் தான் அதிக தங்கம் விற்பனையாகி வருகிறது என்பதை குறிப்பிடத்தக்கது. நாட்டின் மொத்த தங்க விற்பனையில் 50 சதவீதத்திற்கும் மேல் திருமணத்திற்காக தான் நகைகள் வாங்குகிறார்கள் என்பதும் அதனை அடுத்து சேமிப்புக்காக சுமார் 40% வாங்குகிறார்கள் என்றும் கருத்துக்கணிப்பு ஒன்று தெரிவித்துள்ளது.

22 கேரட் நகைகள் தான் இந்தியாவில் பெரும்பாலும் விற்பனை ஆகிறது என்றும் 18 கேரட் நகைகளும் ஓரளவு விற்பனை ஆகிறது என்றும் கூறப்படுகிறது. இந்தியாவின் மொத்த தங்க விற்பனையில் வட இந்தியாவை காட்டிலும் தென்னிந்தியாவில் தான் அதிகம் வாங்குகிறார்கள் என்றும் குறிப்பாக தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா மற்றும் தெலுங்கானா ஆகிய ஐந்து மாநிலங்களில் மட்டுமே இந்தியாவின் மொத்த தங்க விற்பனையில் 40 சதவீதம் விற்பனை ஆகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

கடந்த 2021 ஆம் ஆண்டில் 611 டன் தங்க நகைகளை இந்திய மக்கள் வாங்கி உள்ளார்கள் என்றும் அதில் பெரும்பாலும் தென்னிந்தியர்கள் தான் வாங்கி வந்தார்கள் என்றும் தெரிகிறது. தங்கத்தை தற்போது பொதுமக்கள் ஆபரணங்களாகவும் திருமணத்திற்காக வாங்கும் ஒரு பொருளாக மட்டும் பார்க்காமல் சேமிப்புக்காகவும் வாங்குவதால் தான் தங்கத்தின் விற்பனை அதிகரித்து வருவதாக உலக கோல்ட் கவுன்சில் தெரிவித்துள்ளது. தங்க நகைகள் மீதான முதலீட்டை மக்கள் 100 சதவீதம் நம்புகிறார்கள் என்பதையே இது காட்டுகிறது.

seithichurul

Trending

Exit mobile version