தமிழ்நாடு

தென்மாவட்ட ரயில்கள் திடீர் ரத்து: என்ன காரணம்?

Published

on

திருநெல்வேலி நாகர்கோவில் பிரிவில் வள்ளியூர் – ஆரல்வாய்மொழி ரயில் நிலையங்களுக்கு இடையே இரட்டை பாதை இணைப்பு வேலைகள் நடைபெற்றுவருகின்றன. எனவே தென் மாவட்ட ரயில்கள் சிலவற்றில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து தென்னக ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

1) திருச்சி – திருவனந்தபுரம் – திருச்சி இன்டர்சிட்டி விரைவு ரயில் ஏப்ரல் 20 முதல் ஏப்ரல் 29 வரை திருநெல்வேலி – திருவனந்தபுரம் ரயில் நிலையங்களுக்கு இடையே பகுதியாக ரத்து

2) ஏப்ரல் 20 முதல் ஏப்ரல் 28 வரை தாம்பரத்திலிருந்து இரவு 11.00 மணிக்கு புறப்பட வேண்டிய தாம்பரம் – நாகர்கோவில் அந்தியோதயா விரைவு ரயில், திருநெல்வேலி – நாகர்கோவில் ரயில் நிலையங்களுக்கு இடையே பகுதியாக ரத்து

மறுமார்க்கத்தில் ஏப்ரல் 21 முதல் ஏப்ரல் 29 வரை நாகர்கோவிலில் இருந்து மாலை 03.50 மணிக்கு புறப்பட வேண்டிய நாகர்கோவில் – தாம்பரம் அந்தியோதயா விரைவு ரயில் நாகர்கோவில் – திருநெல்வேலி ரயில் நிலையங்களுக்கு இடையே பகுதியாக ரத்து

3) ஏப்ரல் 24 அன்று புதுச்சேரியிலிருந்து மதியம் 12.00 மணிக்கு புறப்பட வேண்டிய புதுச்சேரி – கன்னியாகுமரி விரைவு ரயில் மற்றும் ஏப்ரல் 25 அன்று கன்னியாகுமரியிலிந்து மதியம் 01.50 மணிக்கு புறப்பட வேண்டிய கன்னியாகுமரி – புதுச்சேரி விரைவு ரயில் ஆகியவை திருநெல்வேலி – கன்னியாகுமரி ரயில் நிலையங்களுக்கு இடையே பகுதியாக ரத்து

4) ஏப்ரல் 28 அன்று சென்னையில் இருந்து மாலை 06.55 மணிக்கு புறப்பட வேண்டிய சென்னை எழும்பூர் – நாகர்கோவில் வாராந்திர விரைவு ரயில் (12667) மற்றும் ஏப்ரல் 29 அன்று நாகர்கோவிலில் இருந்து மாலை 04.15 மணிக்கு புறப்பட வேண்டிய நாகர்கோவில் – சென்னை எழும்பூர் வாராந்திர விரைவு ரயில் ஆகியவை திருநெல்வேலி – நாகர்கோவில் ரயில் நிலையங்களுக்கு இடையே பகுதியாக ரத்து

5) ஏப்ரல் 29 அன்று கன்னியாகுமரி – சென்னை எழும்பூர் விரைவு ரயில் (12634) கன்னியாகுமரியில் இருந்து 45 நிமிடங்கள் காலதாமதமாக மாலை 05.50 மணிக்கு புறப்படும்.

 

seithichurul

Trending

Exit mobile version