கிரிக்கெட்
அனைத்துவித கிரிக்கெட்டிலும் இருந்தும் ஓய்வு: பெங்களூர் அணியின் முக்கிய வீரர் அறிவிப்பு!
அனைத்து வித கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக பெங்களூர் அணியை சேர்ந்த முக்கிய வீரர் ஒருவர் தெரிவித்திருப்பது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முக்கிய வீரரும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் நட்சத்திர வீரருமான டிவில்லியர்ஸ் அனைத்து வித கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
கடந்த 2018 ஆம் ஆண்டு ஏற்கனவே சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார் என்பதும் இதனை அடுத்து டி20 கிரிக்கெட் போட்டிகளில் மட்டும் பங்கேற்று வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் ஐபிஎல் ராயல் சேலஞ்ச் பெங்களூர் அணிக்காக மிக அபாரமாக விளையாடிய வீரர்களில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் கடந்த சீசனில் இவர் சுமாராகவே விளையாடினார்.
இந்த நிலையில் டிவில்லியர்ஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் தனது ஓய்வை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். அதில் எனது பயணம் ஒரு நம்ப முடியாத பயணம், அனைத்து விதமான கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு செய்ய முடிவு செய்துவிட்டேன். மகிழ்ச்சியுடன் எடுக்கப்பட்ட இந்த முடிவை அனைவரும் ஏற்றுக்கொள்வார்கள் என்று எதிர்பார்க்கிறேன்.
என்னால் முடிந்தவரை உற்சாகத்துடன் விளையாடினேன். 37 வயதில் என்னால் பிரகாசிக்க முடியவில்லை. என் குடும்பம், சகோதரர்கள், மனைவி, குழந்தைகள் செய்த தியாகங்கள் மிக அதிகம். என் வாழ்க்கையின் அடுத்த அத்தியாயத்தை உண்மையிலேயே இப்போதுதான் உணர்கிறேன் என்று கூறியுள்ளார். அவரது இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.