உலகம்

ஒமிக்ரான் பாதிப்பு ஏற்பட்டால் மனிதர்களுக்கு நல்லது: தென்னாப்பிரிக்கா விஞ்ஞானிகள் ஆய்வு!

Published

on

ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு ஏற்பட்டால் மனிதர்களுக்கு நல்லது என தென்னாப்பிரிக்கா விஞ்ஞானிகளின் ஆய்வு முடிவு தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா வைரஸ், டெல்டா வைரஸ் உள்பட பல்வேறு உருமாறிய வைரஸ்கள் பரவி வருகிறது என்பதும் தற்போது உலகம் முழுவதும் ஒமிக்ரான் வைரஸ் பரவி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

2 டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு பெரிய அளவில் இருக்காது என்றும் ஓரிரு நாட்கள் மட்டுமே பாதிப்பிலிருந்து அதன்பின் ஒமிக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு விடுவார்கள் என்றும் மருத்துவர்கள் கூறி வருகின்றனர்.

இந்த நிலையிலும் ஒமிக்ரான் வைரஸ் குறித்து தென்னாப்பிரிக்கா விஞ்ஞானிகள் ஆய்வு செய்ததில் மிகிஒமிக்ரான் ரான் வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதன் பின்னர் வேறு எந்த வைரஸாலும் பாதிக்கப்பட வாய்ப்பு இல்லை என்றும் அந்த அளவுக்கு ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு காரணமாக மனிதர்களுக்கு எதிர்ப்பு சக்தி அதிகரித்து விடும் என்றும் ஆனால் அதே நேரத்தில் இரண்டு டோஸ் தடுப்பு ஊசி செலுத்தி இருக்க வேண்டும் என்றும் தென்னாபிரிக்கா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

எனவே 2 டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு ஏற்பட்டால் அதன் பின் வேறு எந்த வைரஸ் பாதிப்பும் அவர்களுக்கு ஏற்படாது என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும் பல்வேறு உருமாறிய வைரஸ்கள் வந்தாலும் ஒமிக்ரான் வைரஸோடு கொரோனா வைரஸ் பாதிப்பு முடிவுக்கு வந்துவிடும் என்றும் தாங்கள் நம்புவதாக தென்னாப்பிரிக்கா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த ஆய்வு முடிவு உலகம் முழுவதும் உள்ள மனித இனத்துக்கே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version