செய்திகள்
பிசிசிஐ தலைவரானார் சவுரவ் கங்குலி…
இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக முன்னாள் வீரர் கங்குலி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இன்று நடைபெற்ற வாரிய தலைவர் பதவிக்கான விருப்ப மனு தாக்கலில் கங்குலி மட்டுமே மனு தாக்கல் செய்திருந்தார். இதனால், அவர் போட்டியின்றி இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுளார். அமித் ஷாவின் மகன் ஜெய் ஷா இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய செயலராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் சகோதரர் அருண் துமால் பிசிசிஐயின் பொருளாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்