கிரிக்கெட்

சவுரவ் கங்குலிக்கு மீண்டும் நெஞ்சு வலி – மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டார்

Published

on

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் இன்னாள் தலைவருமான சவுரவ் கங்குலிக்கு மீண்டும் நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

கொல்கத்தாவில் இருக்கும் மருத்துவமனையில் கங்குலி அனுமதிக்கப்பட்டு, மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருந்து வருகிறார். இந்த மாத தொடக்கத்தில் கங்குலிக்கு முதன்முறையாக நெஞ்சு வலி ஏற்பட்டது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை செய்யப்பட்டது. அதன் பின்னர் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். அதே நேரத்தில் கங்குலிக்கு அடுத்த சில நாட்களில், மேல் சிகிச்சைத் தேவைப்படும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி இருந்தனர்.

சுமார் 5 நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்ற பின்னர், கடந்த 7 ஆம் தேதி அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். அப்போதில் இருந்து இப்போது வரை கங்குலியின் வீட்டில், அவரை கண்காணித்து வந்தது ஒரு மருத்துவக் குழு. இந்நிலையில் அவருக்கு மீண்டும் நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

 

Trending

Exit mobile version