கிரிக்கெட்

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி ரத்து.. சவுரவ் கங்குலி அறிவிப்பு!

Published

on

ஐசிசி நடத்தும் முக்கிய கிரிக்கெட் தொடர்களில் ஒன்றான ஆசிய கோப்பை ரத்து செய்யப்படுவதாக, பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி அறிவித்துள்ளார்.

ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் கூட்டம் நாளை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், இன்ஸ்டாகிராமின் லைவ் நிகழ்ச்சி ஒன்றில் கங்குலி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவதால் இந்திய அணியின் அடுத்த சர்வதேச கிரிக்கெட் போட்டி எப்போது நடைபெறும் என்றும் தெரியாது. பிசிசிஐக்கு ஐபிஎல் முக்கியம். எனவே 2020, ஐபிஎல் இல்லாமல் முடியாது என்றும் கங்குலி குறிப்பிட்டுள்ளார். மேலும், அக்டோபர் மாதம் நடைபெற இருந்த டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியும் தள்ளிப்போக வாய்ப்புள்ளது.

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி செப்டம்பர் மாதம் நடைபெற இருந்தது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version